Tuesday, September 10, 2013

தம்பிராசா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

• மனநலம் என்னும் வலைப் பூவை ஆரம்பித்து தனது அனுபவங்களை பகிரும் மருத்துவர் தம்பிராசா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

இவர் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் காலம் சென்ற தோழர் சண்முகதாசன் அவர்களின் மருமகன். இவரும் கம்யுனிஸ்ட் கட்சியில் செயற்பட்டுள்ளார். இவர் தற்போது இங்கிலாந்தில் பேர்மிங்காம் என்னும் இடத்தில் வசிக்கிறார்.

இவர் மனநோய்கள் குறித்து ஆங்கிலத்தில் நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார். அவை பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக பயன்படுத்தப்படுகின்றன. தற்போது தமிழிலும் ஒரு புத்தகம் எழுதி வருகிறார். இவருடைய அனுபவங்கள் நிச்சயம் தமிழ்வாசகர் பரப்பில் பயனுள்ளதாக அமையும் என நம்பகிறோம்.

முன்னர் டாக்டர் கோவூர் அவர்கள் “கோர இரவுகள்” “மனக் கோலம்” என இரு புத்தகங்கள் வெளியிட்டிருந்தார். அவை அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. தற்போது தோழர் தம்பிராசா அவர்களின் பதிவுகள் அத்தகைய ஒரு தாக்கத்தை தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

அவருடைய வலைப் பூ பக்கத்தை பார்வையிட விரும்புவோர் கீழ்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

http://manaulakam.blogspot.co.uk/?spref=fb

No comments:

Post a Comment