Saturday, September 28, 2013

இந்தப் பெண் ஒரு மாவோஸ்டு என்று முத்திரை குத்தி படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள்.

• இந்த பெண் 2ஜி கோடி ஊழல் செய்யவில்லை.
• இந்த பெண் மீது சொத்து குவிப்பு வழக்கு இல்லை.
• இந்த பெண் ஆச்சிரமம் வைத்திருக்கும் சாமியாரும் இல்லை.
• இவர் சிறுவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்யவில்லை.

எனினும் இந்த பெண் படைகளால் கற்பழிக்கப்ட்டு 
சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள்!

இவள் தனக்கு ரி.வி கேட்கவில்லை.
இவள் தனக்கு இலவச அரிசிகூட கேட்கவில்லை.
இவள் கேட்டதெல்லாம் தமது காட்டை
அந்நியருக்கு விற்க வேண்டாம் என்ற ஒன்று மட்டுமே!

தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த இடத்தை கனிமவளம் எடுப்பதற்காக வெளிநாட்டு முதலாளிகளுக்கு விற்கவேண்டாம் என்று கோரியதால் இந்தப் பெண் ஒரு மாவோஸ்டு என்று முத்திரை குத்தி படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள்.

சிரியாவில் அப்பாவிகள் கொல்லப்படுவதாக கண்ணீர் சிந்தும் அமெரிக்கா மற்றும் முதலாளித்துவ நாடுகள் இந்தியாவில் இந்த பழங்குடி மக்கள் மீது நடைபெறும் கொலைகள், கற்பழிப்புகள், சொத்துகளை சூறையாடல் என்பன குறித்து ஏன் அக்கறை கொள்வதில்லை?

பாலஸ்தீனத்தில் கல்லெறியும் சிறுவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லும் இஸ்ரவேல் போல் இந்தியாவில் அப்பாவி பழங்குடி மக்களைக் கொன்றுவிட்டு அவர்களை நக்சலைட் பயங்கரவாதிகள் என்று இந்திய அரசு கூறுகிறது.

இந்திய அரசு காஸ்மீரில் அப்பாவி மக்களை கொல்லும்போது நாம் ஏன் என்று கேட்கவில்லை.
இந்திய அரசு பழங்குடி மக்களை கொல்லும்போது நாம் ஏன் என்று கேட்கவில்லை.
இறுதியாக இந்திய அரசு எம்மை கொன்ற போது ஏன் என்று யாருமே கேட்கவில்லை.

இந்திய அரசு பயங்கரவாதிகளை ஒழிப்பதாக கூறி முதலில் பஞ்சாப் போராட்டத்தை நசுக்கியது. பின்னர் காஸ்மீர், நாகலாந்து, மணிப்பூர் போன்ற போராட்டங்களை நசுக்கியது. இறுதியாக இலங்கையில் தமிழர்களின் போராட்டத்தை நசுக்கியது. தற்போது பழங்குடி மக்களின் போராட்டத்தை நசுக்க முனைகிறது.

இந்த அநீதிகளுக்கு எதிராக அனைத்து போராட்ட சக்திகளும் ஒன்றினைந்து போராடுவதன் மூலமே இந்திய அரசை தோற்கடிக்க முடியும். இதை உணர்ந்து அனைவரும் ஒன்றினைவோம்.

No comments:

Post a Comment