Sunday, September 30, 2018

சிங்கம் சிங்கிளாக களமிறங்கிறது!

சிங்கம் சிங்கிளாக களமிறங்கிறது!
செய்தி- தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் நேரடியாக களமிறங்கிறார் சம்பந்தன்
சிங்கம் சிங்கிளாக களமிறங்கிறதாம்
எத்தனை தலை உருளப் போகிறதோ தெரியவில்லை?
சரி பரவாயில்லை. இப்போ எமது கேள்வி என்னவெனில்
அப்ப, இத்தனை நாளும் சிங்கம் என்ன தூங்கிட்டா இருந்தது?
9 வருடமாக தூங்கிட்டு இருந்த சிங்கம் இப்ப எதற்காக களமிறங்குவதாக அறிக்கை விடுகுது?
கைதிகள் விடுதலை தொடர்பாக தன்னை சந்திக்க வந்த இளைஞர்களிடம் பேப்பர் படித்துக் கொண்டு தன்னிடம் திறப்பு இல்லை என்று கிண்டலாக கூறிய இந்த கிழட்டு சிங்கம் இப்ப எதற்காக தனித்து களமிறங்கிறது?
வரப்போகும் மாகாணசபைத் தேர்தலுக்காக நடத்தப்புடும் நாடகமா? அல்லது ஜ.நா வில் இலங்கை அரசைக் காப்பாற்றுவதற்கு அரகேற்றும் நாடகமா?
எதுவாயினும் மக்கள் தெளிவு பெற்றுவிட்டார்கள். இனி தமிழ் மக்களை இந்த சிங்கங்களால் ஏமாற்ற முடியாது.

No comments:

Post a Comment