Sunday, September 30, 2018

இங்கே ஜனாதிபதி மைத்திரி குடும்பதினரின் நடுவே

இங்கே ஜனாதிபதி மைத்திரி குடும்பதினரின் நடுவே ஒரு வயோதிபர் எட்டிப் பார்கிறாரே தெரிகிறதா அவர் யார் என்று?
ஆம். நம்ப சம்பந்தர் அய்யாவேதான். அதுசரி தனியாக அங்கு என்ன செய்கிறார்? பொங்கல் வாங்க போனாரா என்று நினைத்து விடாதீர்கள்.
அவர் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நேரடியாக ஜனாதிபதியுடன் நடவடிக்கையில் இறங்கியுள்ளாராம்.
அப்படித்தான் நாங்கள் நம்ப வேண்டுமாம். வேறு வழி?
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாதவர் எப்படி அரசியல் தீர்வை பெற்று தரப் போகிறார்?
இப்படி ஒருவர் பிற்காலத்தில் தமிழ் மக்களை ஏமாற்றப் போகிறார் என்று தெரிந்துதான் நம் முன்னோர் இந்த பழமொழியை கூறிச் சென்றுள்ளனரா?
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப் போறன் என்றானாம்.

No comments:

Post a Comment