Sunday, September 30, 2018

மீண்டும் தமிழ் இனம் எழந்து நிற்கும்

•மீண்டும் தமிழ் இனம் எழந்து நிற்கும் என்ற நம்பிக்கை
இப்படியான தமிழ் இளைஞர்களால்தான் ஏற்படுகின்றது!
இதோ ஜெனிவா ஜ.நா நோக்கி ஈருளி பயணம் செல்கிறார்களே,
இந்த இளைஞர்களும் தமிழர்கள்தான்
இவர்களும் மற்றவர்கள்போல்
கொலிடேக்கு நல்லூர் திருவிழா சென்றிருக்கலாம்-
அல்லது
ஈலிங் அம்மன் கோவிலில் காவடி எடுத்திருக்கலாம்
அல்லது
100 டாலர் ரிக்கட் எடுத்து சுப்பர் சிங்கர் பாடகர்களின் கச்சேரியாவது பார்த்திருக்கலாம்.
அல்லது
பிறந்தநாள் விழாவோ அல்லது சாமத்தியசடங்கு விழாவோ நடத்தி தண்ணி அடித்து ஆடிப் பாடியிருக்கலாம்.
ஆனால் இவர்களோ, கொட்டும் மழையிலும் வீசும் புயல் காற்றிலும்
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டி ஈருளி பயணம் செய்கிறார்கள்.
அதைக்கூட கோட்டு சூட்டு போட்டு விமானத்தில் சென்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து செய்திருக்கலாம்.
ஆனால் இவர்கள் ஈருளியில் செல்வதோடு செல்லும் வழியெங்கும் மக்களுக்கு பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஒருநாளில் பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை எடுத்துக் கூறுகிறார்கள்.
இங்கு வேதனையான விடயம் என்னவென்றால் மக்களால் பதவி பெற்ற எமது எம்.பி மார்கள் தங்களுக்கு நிதி சேகரிக்க வந்து செல்கிறார்கள்.
ஆனால் இவ் இளைஞர்களோ மக்களுக்கு நியாயம் கிடைக்க பயணம் செய்கிறார்கள்.
மீண்டும் தமிழ் இனம் எழுந்து நிற்கும் என்ற நம்பிக்கை இத்தகைய இளைஞர்களால்தான் ஏற்படுகின்றது.

No comments:

Post a Comment