Sunday, September 30, 2018

எச்ச ராசா மீது நடவடிக்கை எடுக்க

•எச்ச ராசா மீது நடவடிக்கை எடுக்க
நீதிமன்றத்திற்கும் பொலிசாருக்கும் தைரியம் உண்டா?
உயர்நீதிமன்றத்தை “மயிர்” என்று எச்ச ராசா பேசியுள்ளார். அதுமட்டுமல்ல பொலிசார் அத்தனை பேரும் ஊழல் பேர்வழிகள் என்றும் கூறியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தை மண்ணாங்கட்டி என்று திட்டியுள்ளார். தேவையானால் பொலிசாருக்கு தான் லஞ்சம் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதையே ஒரு முஸ்லிமோ அல்லது கிருஸ்த்தவரோ கூறியிருநதால் உயர்நீதிமன்றம் நள்ளிரவில் கூடியிருக்கும்.
தமிழக பொலிஸ் பாய்ந்து சென்று கூறியவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கும்.
ஆனால் இதவரை உயர்நீதிமன்றமோ அல்லது தமிழக பொலிசோ எந்த நடவடிக்கையும் எச்ச ராசா மீது எடுக்கவில்லை.
தமிழக அரசோ வாயே திறக்கவில்லை. சம்பிரதாயத்திற்கு ஒரு கண்டனம்கூட தெரிவிக்க முன்வரவில்லை.
ஏற்கனவே எஸ.வி. சேகர் பெண்களை இழிவு படுத்தினார். இப்போது எச்ச.ராசா நீதிமன்றத்தையும் பொலிசையும் இழிவு படுத்தியுள்ளார்.
திருமுருகன்காந்தி, வளர்மதி கண்ணதாசன் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இவர்கள் பார்ப்பணர்கள் என்பதாலும் இவர்கள் தோளில் தொங்கும் பூணூல் காரணமாகவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்கிறதா?

No comments:

Post a Comment