Sunday, September 30, 2018

மோடியும் சம்பந்தர் அய்யாவும் சந்திப்பு!

•மோடியும் சம்பந்தர் அய்யாவும் சந்திப்பு!
என்ன பேசியிருப்பார்கள்? இப்படியிருக்குமோ!
மோடி- என்ன மிஸ்டர் சம்பந்தன், தமிழ் மக்களுக்கு தீர்வு கேட்டு வந்திருக்கிறீர்களா?
சம்பந்தர் அய்யா- சீ சீ என்ன மோடிஜி அவர்களே! இப்படிக் கேட்டுபுட்டீர்களே? அந்த கருமத்தை இதுவரை நான் ஒருமுறைகூட கேட்டதில்லையே. இனியும் அதை கேட்பேனா?
மோடி- அப்ப என்ன விசயமாக டில்லிக்கு வந்துள்ளீர்கள்? இருதய ஆப்பிரேசன் செய்தது செக்கப் பண்ண வந்துள்ளீர்களா?
சம்பந்தர் அய்யா- அப்பிடி இல்லை சேர். உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
மோடி – நான் உங்க தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லையே. அப்புறம் எதற்கு நன்றி?
சம்பந்தர் அய்யா- எங்க கூட்டமைப்பு பெயர் ரொம்ப டமேஜ்யாய் போய்கிடக்கு. இப்ப நீங்க டில்லிக்கு அழைத்து போட்டோ பிடிக்க வாய்ப்பு தந்தது எங்களுக்கு பெரும் உதவியாய் போச்சு. இனி கொஞ்ச நாளைக்கு இந்த போட்டோவைக் காட்டி காலத்தை ஓட்டிவிடுவம்.
மோடி – சரி, சரி, மாகாணசபை எலக்சன் வரப்போகுதாம். உங்க நிலைமை சரியில்லை என்று ரிப்போட் சொல்லுது. எப்படி சமாளிக்கப் போறீங்க?
சம்பந்தர் அய்யா- வழக்கம்போல் இந்தியா எங்களை காப்பாற்றும் என்று நம்பிக் கொண்டிருக்கிறம் சேர். கைவிட்டுடுதாயுங்கோ.
மோடி- நாங்கள் வழக்கம்போல் பணம் தருவோம். ஆனால் உங்க முதலமைச்சரை பிரிந்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் என்ன இருந்தாலும் வோட்டு போடப் போகும் மக்களை எப்படி சமாளிக்கப் போறீங்க?
சம்பந்தர் அய்யா- அது ரொம்ப சிம்பிள் சேர். அடுத்த வாரம் தீர்வு வரப்போகுது என்று அறிக்கை விட்டால் உடனே நம்பி வோட்டு போடுவார்கள் எமது மக்கள்.
மோடி- உண்மையாகவா? உடனே நம்பிவிடுவார்களா?
சம்பந்தர் அய்யா- அடுத்த வருடம் தீர்வு வரப் போகிறது என்று எத்தனை தடவை கூறிவிட்டேன். அத்தனை தடவையும் மக்கள் நம்பி எமக்கு வோட்டு போட்டிருக்கிறார்கள். ஒருமுறைகூட எங்கே தீர்வு என்று அவர்கள் என்னை கேட்டதேயில்லை சேர்.
மோடி- ஆச்சரியமாக இருக்கிறது மிஸ்டர் சம்பந்தன்! நான் பதவிக்கு வந்தால் சுவிஸ் பாங்கில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய அக்கவுண்டிலும் 15 லட்சம் போடுவேன் என கூறியிருந்தேன். இப்ப எங்கே போனாலும் அந்த பணம் எங்கே என்று மக்கள் என்னைக் கேட்கிறார்கள்.
சம்பந்தர் அய்யா- இது ஒரு ரீம் வேர்க் சேர். சுமந்திரன் போன்ற ஒரு தம்பியை நீங்கள் பக்கத்தில் வைத்திருக்க வேண்டும். இப்ப உதாரணமாக நாடு திரும்பியதும் “ தீர்வு ரெடி. மாகாணசபை எலெக்கசன் முடிந்ததும் தீர்வு பாராளுமன்றத்தில் வைக்கப்படும்” என நான் ஒரு அறிக்கை விடுவேன். அதன்பின் தம்பி சுமந்திரன் நானும் நீங்களும் சந்தித்த போட்டோவை வெளியிட்டு “இந்தியா மிகவும் ஆர்வமாக இருக்கிறது” என்று அறிக்கை விடுவார்.
மோடி - இப்படி சொன்னதும் மக்கள் நம்பி விடுவார்களா? தமிழ் மக்கள் புத்திசாலிகள் என்றல்லவா இத்தனை நாளும் அறிந்திருந்தேன்.
சம்பந்தர் அய்யா- பொறுங்க சேர். இனிதான் விசயமே இருக்கு. அப்புறம் சுமந்திரனிடம் லாப்டாப் வாங்கிய சில ஊடகவியலாளர்கள் இருக்கினம். அவை உடனே “மகிந்தவை சந்தித்தபோது மோடி கண்டிப்பு. தீர்வை குழப்பினால் கடும் விளைவை சந்திக்க வேண்டி வரும் என மிரட்டல். மகிந்த வெளிறிய முகத்துடன் வெளியேறினார். கொழும்பு வந்ததும் தனது சோதிடர் ஆலோசனையின் பேரில் கையில் மேலும் சில கறுப்பு நூல்களை கட்டியுள்ளார்” என்று ஆய்வு கட்டுரை எழுதுவார்கள்.
மோடி- அப்படிக்கூட எழுதுவார்களா? இதையெல்லாம் மக்கள் நம்புவார்களா?
சம்பந்தர் அய்யா- என்ன சேர் இப்படி கேட்கிறீர்கள்? இதற்கப்பறம் சுமந்திரனின் செம்புகள் சிலர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் பேஸ்புக்கில் “ஒப்பிரேசன் சம்பந்தன்” என்று ஒரு கதை எழுதுவார்கள். இத்தனைக்கும் பிறகு மக்கள் எப்படி நம்பாமல் இருப்பார்கள்?
மோடி – சரி. பார்த்து செய்யுங்க. அப்புறம் அமிர்தலிங்கத்திற்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடக்கப் போகுது போல. அப்புறம், எங்க கடற்படை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து உங்க திரிகோணமலை கடலில் போர்ப் பயிற்சி செய்ததில் உங்களுக்கு ஏதும் வருத்தம் உண்டா?
சம்பந்தர் அய்யா- சேர்! நீங்க இலங்கைப் படையுடன் சேர்ந்து போர்ப் பயிற்சி செய்தாலும் சரி அல்லது அவைக்கு போர்க்கப்பல் கொடுத்தாலும் சரி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்ர பதவியை பறிக்க மகிந்த கட்சிக்காரர் பிளான் போடுயினம். அதை கொஞ்சம் கவனித்தால் சரி சேர்.

No comments:

Post a Comment