Sunday, September 30, 2018

சஞ்சய்தத்க்கு ஒரு நியாயம் பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம்

•சஞ்சய்தத்க்கு ஒரு நியாயம்
பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இந்திய நியாயம்?
நடிகர் சஞ்சய்தத் மும்பை வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர். அவரது வழக்கும் சிபிஜ யினாலே நடத்தப்பட்டது.
நடிகர் சஞ்சய்தத் தண்டனை குறைக்கப்பட்டு குறுகிய காலத்தில மகாராஷ்ரா அரசினால் விடுதலை செய்யப்பட்டார்.
அப்போது, சஞ்சய்தத் விடுதலை தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்படவில்லை.
அப்போது, சஞ்சய்தத் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சிபிஜ தடுக்கவில்லை.
அப்போது மும்பை வெடிகுண்டில் காயமடைந்தவர்களை யாரும் பேட்டி கண்டு பிரசுரிக்கவில்லை.
ஆனால் பேரறிவாளன் உட்பட எழுவரை மாநில அரசு விடுதலை செய்ய அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும்,
தமிழக அரசு விடுதலை தீர்மானத்தை ஆளுநரக்கு அனுப்புகிறது.
ஆளுநனர் மத்திய உள்துறை அமைச்சுக்கு அனுப்புகிறார்.
பத்திரிகைகள் காயமடைந்த பொலிஸ் அதிகாரியின் பேட்டியை பிரசுரம் செய்கின்றன.
ஏன் இந்த எழுவருக்கும் இந்த நிலை?
இவர்கள் தமிழர்கள் என்பதை விட வேறு காரணம் ஏதும் இல்லை.

No comments:

Post a Comment