Sunday, September 30, 2018

•இந்த அவலத்தை என்னவென்பது?

•இந்த அவலத்தை என்னவென்பது?
பாஜக வின் தமிழக தலைவர்களில் ஒருவர் பொன் ராதாகிருஸ்ணன். இவர் மத்திய அமைச்சரும்கூட.
இவர் அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவரை ஈழத் தமிழர் கண்ணன் பேரின்பன் என்பவர் சந்தித்தார்.
ஈழத்தில் பல இந்து ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன. இந்து அமைச்சரான நீங்கள் ஏன் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அதனை தடுக்கக்கூடாது? என அவர் கேட்டிருக்கிறார்.
அதற்கு அமைச்சர் ராதாகிருஸ்ணன் “ தமிழர் எல்லாம் பௌத்தர்களாக மாறினால் பிரச்சனை இல்லைத்தானே?” என்று பதில் அளித்துள்ளார்.
எந்தளவு முட்டாள்தனமான பதிலை ஒரு மத்திய அமைச்சர் அதுவும் தமிழ் அமைச்சர் கூறியிருக்கிறார்.
உண்மையில் 35 வருடங்கள் கடந்து விட்டபோதும் இன்னும் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனை ஒரு மத்திய அமைச்சருக்கு புரியவில்லை என்றால் இது யார் தவறு?
ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனையை இன்னும் புரிந்து கொள்ளாதது அவர்களின் தவறா? அல்லது அவர்களுக்கு புரிய வைக்காதது ஈழத் தமிழர்களின் தவறா?
இந்த பொரி உருண்டை அமைச்சரைத்தான் அண்மையில் நாடு கடந்த தமிழீழ அரசின் அமைச்சர் சந்தித்து உதவி கேட்டிருந்தார்.

No comments:

Post a Comment