Sunday, September 30, 2018

என் வீட்டுச் சோத்தை தின்றுவிட்டு

•என் வீட்டுச் சோத்தை தின்றுவிட்டு
பக்கத்து வீட்டு எஜமானுக்கு வாலாட்டும் நாய்!
நாய் நன்றியுள்ள மிருகம் என்றார்கள்
ஆனால் இந்த நாய்க்கு அது இல்லையே
அது என் வீட்டு சோத்தை தின்றுவிட்டு
பக்கத்து வீட்டு எஜமானுக்கு வாலாட்டுதே!
நடந்தது இனப்படுகொலை அல்ல என்றபோதே
அதை அடித்து விரட்டியிருக்க வேண்டும்
இரக்கப்பட்டு விட்டு வைத்ததால்
அது இப்போது தன் புத்தியைக் காட்டுது
அன்று, தமிழீழத்தை கைவிடுகிறோம்- ஏனெனில்
அதற்கு இணையான சமஸ்டி வருகுது என்றது
இப்போது சமஸ்டி தேவையில்லை
மாகாணசபைக்கு கூடுதலாக சில அதிகாரம்
தந்தால் போதும் என்று கூறுகிறது.
இன்னும் கொஞ்சநாள் போனால்
அதுவும் வேண்டாம் என்று கூறினாலும் கூறும்.
அது என்ன வேண்டுமானாலும் கூறிவிட்டுப் போகட்டும்
அதை எம்.பி யாக்கிய பாவத்திற்கு அனுபவிக்கலாம்
ஆனால் இப்போது எமது கவலை என்னவென்றால்
இதையும் “ஒப்பிரேசன் சுமந்திரன்” என்று செம்புகள்
நாலு கட்டுரை எழுதி தள்ளப் போகுதுகளே
அதை நினைச்சால்தான் கண்ணைக் கட்டுதே?

No comments:

Post a Comment