Sunday, September 30, 2018

போஸ்ட் ஆபிசுக்கு போக வழி தெரியாத

போஸ்ட் ஆபிசுக்கு போக வழி தெரியாத பாதிரியாருக்கு சிறுவன் ஒருவன் வழி காட்டினான்.
நன்றி கூறிய பாதிரியார் சிறுவனிடம் “ உனக்கு சொர்க்கம் போகும் வழி சொல்லி தருகிறேன். எனது திருச்சபைக்கு வா” என்றார்.
அதற்கு அந்த சிறுவன் “ பக்கத்தில் இருக்கும் போஸ்ட் ஆபிசுக்கு வழி தெரியாத நீங்களா சொர்க்கத்திற்கு வழி காட்டப் போகிறீர்கள்?” என்று கேட்டானாம்.
இந்த சிறுவனுக்கு இருக்கும் புத்திகூட சில தமிழ் பெரியவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.
சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாத சம்பந்தர் அய்யா எப்படி இனப் பிரச்சனைக்கு தீர்வு பெற்று தருவார் என்ற கேள்வியை இவர்கள் கேட்க மறுக்கிறார்கள்.
ஆதனால்தான் சம்பந்தர் அய்யாவும் ஒவ்வொரு வருடமும் அடுத்த வருடம் தீர்வு வரும் என்று தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
சிலரை பல காலம் ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்கிறார்கள்.
ஆனால் தன்னால் பல காலம் தமிழ் மக்கள் அனைவரையும் ஏமாற்ற முடியும் என்பதை சம்பந்தர் அய்யா நிரூபித்து வருகிறார்.

No comments:

Post a Comment