Sunday, September 30, 2018

எமக்காக குரல் கொடுத்தவருக்கு

•எமக்காக குரல் கொடுத்தவருக்கு
குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை!
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தமையினால் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனிமை சிறையில் அடைத்து வைத்து மருத்துவ வசதிகூட மறுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்.
சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் குறைந்த நிலையில் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சட்ட விரோதமான முறையில் வேண்டுமென்றே அவர் இந்திய அரசினால் பழி வாங்கப்படுகிறார்.
தமிழ் இன உணர்வாளர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதன் மூலம் அவர்களின் உணர்வுகளை மழுங்கடிக்க உளவுத்துறையினர் முயலுகின்றனர்.
தமிழக அரசு ஒருபறம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கண்டன கூட்டங்களை நடத்துகின்றது. மறுபுறம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திருமுருகன்காந்தியை சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறது.
தமிழக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப் படுத்துவோம். திருமுருகன் காந்தியின் விடுதலைக்காக குரல் கொடுப்போம்.

No comments:

Post a Comment