Sunday, September 11, 2016

•இவர்கள் ஏன் தமிழ் மக்களுக்காக போராடுகிறார்கள்?

•இவர்கள் ஏன் தமிழ் மக்களுக்காக போராடுகிறார்கள்?
•இவர்கள் ஏன் தமிழ் மக்களுக்காக சிறையில் வாடுகிறார்கள்?
தமிழக மக்களுக்காக காவிரியில் தண்ணீர் கேட்டு இவர்கள் போராடுகிறார்கள்.
தன் மகள் செல்வி குடும்பம் பெங்களுரில் இருப்பதால் கலைஞர் போராடாமல் இருக்கலாம். ஆனால் இவர்கள் போராடாமல் இருக்க மாட்டார்கள்.
தங்கள் சொத்து பெங்களுரில் இருப்பதால் சன் டிவி மாறன் மௌனமாக இருக்கலாம். ஆனால் இவர்கள் மௌனமாக இருக்கமாட்டார்கள்.
தான் கன்னடத்தி என்பதால் ஜெயா அம்மையார் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்யலாம். ஆனால் இவர்கள் தமிழர்கள். தம் இனத்திற்கு துரோகம் செய்யமாட்டார்கள்.
போராட்டம் நடத்தினால் சிறை செல்ல நேரிடும் என அஞ்சி சிலர் ஒளிந்துகொள்ளலாம். ஆனால் இவர்கள் சிறை செல்லவும் அஞ்ச மாட்டார்கள்.
ஏனெனில்,
இவர்கள் தோழர் தமிழரசன் பாதையை பின்பற்றுபவர்கள்.
இவர்கள் தமிழ் மக்களுக்காக தம்மை அhப்பணித்தவர்கள்.
இவர்கள் தமிழ் இன உணர்வு மிக்கவர்கள்.
தோழர் தமிழரசன் அன்றே காவரி அணையை குண்டு வைத்து உடைக்க திட்டம் போட்டவர். அவர் தமிழ் மக்களுக்காக போராடியதால் உளவுப்படைகளால் நயவஞ்சமாக கொல்லப்பட்டவர்.
தோழர் தமிழரசன் பாதையில் சென்றமையினால் மதுரையில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைத்தாலும் , கொன்று புதைத்தாலும் கலங்காது தமிழ் மக்களுக்காக போராடுபவர்களே தமிழரசன் தோழர்கள்.
அவர்களது போராட்டம் வெல்லட்டும்.
தமிழர்கள் அடிமை நிலையில் இருந்து விடுதலை பெறட்டும்.

No comments:

Post a Comment