Sunday, September 11, 2016

•இது என்ன நியாயம்?

•இது என்ன நியாயம்?
காந்தியை சுட்ட கோட்சேவுக்கு ஆதரவாக
கூட்டம் போட அனுமதிக்கிறார்கள்.
அந்த கோட்சேவுக்கு சிலை வைக்கவும் அனுமதி வழங்கிறார்கள்
ஏன்? எப்படி? என்று கேட்டால்
இந்தியா ஜனநாயக நாடாம்.
இங்கு,
அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டாம்
அனைவருக்கும் எழுத்து சுதந்திரம் உண்டாம்
அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உண்டாம்.
என்று பதில் அளிக்கிறார்கள்.
அப்படியென்றால் தமிழ் இன விடுதலைக்காக போராடிய
தோழர் தமிழரசனுக்கு
வீர வணக்கம் செய்ய ஏன் தடுக்கிறார்கள்?
பேரணி செல்ல ஏன் கைது செய்கிறார்கள்?
ஒன்றுகூடவே ஏன் தடை போடுகிறார்கள்?
பெற்ற தாயக்கும்கூடவா அனுமதி இல்லை?
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால்
தோழர் தமிழரசனுக்கு மட்டும் ஏன் தடை?
ஏனென்றால்
தோழர் தமிழரசன் மட்டுமே
அடிமையாக இருக்கும் தமிழனை
விழித்தெழுமாறு கோரியவர்.
ஒரு தமிழரசனைக் கொன்று புதைத்தார்கள்
ஆயிரம் தமிழரசன்கள் முளைத்தெழுந்துள்ளார்கள்.
பேரணிக் தடை என்று பிடித்து அடைத்தார்கள்
அடைத்த இடத்திலேயே அவர்கள் போர் அணியாக மாறினார்கள்.
துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்றார் தோழர் மாஓ சேதுங்
தோழர் தமிழரசன் தோளில் சுமந்த துப்பாக்கி
தோள்களுக்காக காத்து இருக்கின்றது.
எத்தனை தடை போட்டாலும்
எவ்வளவு அடக்குமுறை செய்தாலும்
அத்தனையும் உடைத்தெறிந்து
விரைவில,
தமிழர்கள் கையில் அதிகாரம் கிடைக்கும்.
இது உறுதி.

No comments:

Post a Comment