Sunday, September 11, 2016

•இந்தியாவில்,

•இந்தியாவில்,
கடலில் கரைக்கும் மண் பிள்ளையாருக்கு பாதுகாப்பு உண்டு
முற்றும் துறந்த நிர்வான சாமிகளுக்கும் பாதுகாப்பு உண்டு
முதலாளி அம்பானி மனைவிக்கும்கூட இசட் பிரிவு பாதுகாப்பு உண்டு
ஆனால் அப்பாவி தமிழனுக்கு மட்டும் பாதுகாப்பு இல்லை!
கர்நாடகாவில் தமிழனின்,
கடையை அடித்து நொருக்குகிறார்கள்
வாகனத்தை தீவைத்து கொளுத்துகிறார்கள்
சூடான மூத்திரம் தேவையா என திமிராக கேட்கிறார்கள்
இத்தனைக்கும் தமிழன் செய்த தவறு என்ன?
தனக்குரிய தண்ணீரைக் கேட்டது குற்றமா?
தண்ணீர் கேட்டால் தமிழனை அடிப்பதா?
மாநில அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது
மத்திய அரசு கண்மூடி யோகா செய்கிறது.
தமிழ் தலைவர்களோ இந்திய ஒருமைப்பாடு பற்றி போதிக்கின்றார்கள்.
பாவம் தமிழ் மக்கள்!
தோழர் தமிழரசன் கூறியதுபோல் தமிழ்நாடு விடுதலை பெற்றால்தான்
தமிழன் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்று நினைக்க வேண்டிய தருணம் இது.

No comments:

Post a Comment