Sunday, September 11, 2016

•கடவுள் உண்மையில் பெருந்தன்மை கொண்டவர்தான்!

•கடவுள் உண்மையில் பெருந்தன்மை கொண்டவர்தான்!
கடவுள் உண்மையில் பெருந்தன்மை கொண்டவர்தான். ஆதனால்தான் தனக்கு தங்கம் இல்லாவிட்டாலும்கூட தன்னை குத்தகை எடுத்தவர்களுக்கு தங்கமாக வாரி வழங்கிறார்.
திருப்பதியில் லட்டு குத்தகை எடுத்தவனும், பழனியில் பஞ்சாமிர்தம் குத்தகை எடுத்தவனும் குருவாயூரில் நெய் குத்தகை எடுத்தவனும் தங்கத்தில் ஜொலிக்க கடவுள் அருள் இன்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
சரி. கடவுள் பெருந்தன்மையானவராகவோ அல்லது இளிச்சவாயராகவோ இருந்தவிட்டுப் போகட்டும். அது பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் அதிக பெண் தெய்வம் உள்ள இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 92 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுவது என்ன நியாயம்?
பெண்களை தெய்வமாக மதிக்கும் நாட்டில் அம்பானி மனைவிக்கு எதற்கு இசட் பிரிவு பாதுகாப்பு? என்று நான் கேட்கப் போவதில்லை. மாறாக எல்லாம் வல்ல இந்த கடவுள் தன் நாட்டில் 92 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுவதற்கு ஏன் அனுமதிக்கிறார்?
குறிப்பு- தயவு செய்து நான் இந்த நியாயத்தை கேட்டமைக்காக தந்தை பெரியாரை யாரும் திட்டி கருத்து பகிர வேண்டாம்.

No comments:

Post a Comment