Sunday, September 11, 2016

•எல்லாம் தலைவிதி என்று நொந்து கொள்வதை விட வேறு வழியிருக்கா இந்த தமிழ் இனத்திற்கு?

•எல்லாம் தலைவிதி என்று நொந்து கொள்வதை விட
வேறு வழியிருக்கா இந்த தமிழ் இனத்திற்கு?
கர்நாடகாக்காரன் தண்ணீர் தரமுடியாது. தேவையானால் மூத்திரம் தரலாம் என்று கொஞ்சம்கூட இரக்கமின்றி திமிராக கேட்கிறான்.
தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் பெற்றுக்கொடுக்க வேண்டிய அமைச்சரோ “விவசாயிகள் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து செழிப்பாக இருக்கிறார்கள்” என்று அறிக்கை விடுகிறார்.
பாவம் தமிழக தமிழர்கள். அவர்களால் தமது அமைச்சரையும் கண்டிக்க முடியவில்லை. கர்நாடகாவையும் எதிர்க்க முடியவில்லை.
மலேசியாவில் இலங்கைத் தூதரை உதைத்த விடயத்தில் பினாங்கு உதவி முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்.
அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட மகிந்த தண்டிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளார். மலேசிய அரசுகூட இது பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்று கூறியுள்ளது.
ஆனால் நம்ம தலைவர் சம்பந்தர் “அவர்களை கைது செய்து வந்து இலங்கையில் தண்டிக்க வேண்டும்” என்கிறார்.
அவரது கைத்தடி சின்ன கதிர்காமர் சுமந்திரனோ “தூதுவரைத் தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்கிறார்.
யுத்தம் முடிந்து 7 வருடமாகிவிட்டது. இன்னும்,
போர்க்குற்ற விசாரணை நடக்கவில்லை.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.
காணோமல் போனோர் கூட இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இவை குறித்து சம்பந்தருக்கும் சுமந்திரனுக்கும் அக்கறை இல்லை. அவர்களது அக்கறை எல்லாம் மகிந்தவுக்கு எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதே.
என்ன செய்வது? இந்த தலைவர்கள் தமக்கு வாய்ச்சமைக்காக தமிழ் மக்கள் தங்கள் தலைவிதியை நொந்து கொள்வதை விட வேறு என்ன வழி இருக்கு?

No comments:

Post a Comment