Sunday, September 11, 2016

•மலேசியாவில் மகிந்தவுக்கு எதிர்ப்பு காட்டிய தமிழர்கள்!

•மலேசியாவில் மகிந்தவுக்கு எதிர்ப்பு காட்டிய தமிழர்கள்!
உலகில் ஒரு மூலையில் தமிழனுக்கு தீங்கு நேர்ந்தாலும் உலகம் பூராவும் உள்ள தமிழன் குரல் கொடுப்பான் என்பதற்கு மலேசியாவில் தமிழர்கள் காட்டிய எதிர்ப்பு ஒரு நல்ல சான்றாகும்.
இலங்கையில் தமிழர்களை இன அழிப்பு செய்யும்போது மலேசியா தமிழர்களும் தன்னை எதிர்ப்பார்கள் என்பதை மகிந்த ஒருபோதும் நினைத்திருக்கமாட்டார்.
இலங்கையில் சம்பந்தரையும் சுமந்திரனையும் விலைக்கு வாங்கிவிட்டால் உலகில் உள்ள தமிழர்களை எல்லாரையும் அடக்கிவிடலாம் என நினைத்த மகிந்தவின் எண்ணத்தில் பேரிடி விழுந்துவிட்டது.
மகிந்த இந்தியா சென்றால் அங்குள்ள தமிழர்கள் எதிர்க்கிறார்கள். மகிந்த மலேசியா சென்றால் அங்குள்ள தமிழர்கள் எதிர்க்கிறார்கள். அவரால் இப்போது எங்கேயும் நிம்மதியாக செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.
தமிழர்களை ஜ.நா கைவிட்டிருக்கலாம். தமிழர்களை அவர்கள் நம்பிய இந்தியா கைவிட்டிருக்கலாம். ஆனால் ஈழத் தமிழர்களை உலகில் வாழும் தமிழர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.
என்றுமில்லாதவாறு இன்று உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் தமக்கிடையே ஒன்று சேருகிறார்கள். போராடுகிறார்கள்.
இனி தமிழினத்தை யாராலும் அழிக்க முடியாது என்ற நம்பிக்கையை மலேசிய தமிழர்கள் தோற்றுவித்துள்ளார்கள்.
தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இதுதான் போலும்.!
தமிழன்டா!

No comments:

Post a Comment