Saturday, June 29, 2019

•தோழர் சுந்தரம் நினைவுகள் நீடூழி வாழ்க!

•தோழர் சுந்தரம் நினைவுகள் நீடூழி வாழ்க!
இன்று (09.06.2018) தோழர் சுந்தரம் அவர்களின் இரண்டாவது நினைவு தினம் ஆகும்.
தனக்கென்று வாழ்ந்து
தனக்கென்று உழைப்பவன்
மனிதன்!
தன் வாழ்க்கையையும்
தன் உழைப்பையும்
பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன்
-மாமேதை காரல் மார்க்ஸ்
ஆம். மறைந்த தோழர் சுந்தரம் அவர்களும் ஒரு மாமனிதர்தான். அவர் தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைத்தவர் அல்ல. மாறாக, இறக்கும் வரையில் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையையும் மக்களுக்காக முழுமையாக அர்ப்பணித்த ஒரு புரட்சியாளர்.
தோழர் சுந்தரம் மாக்சிய லெனிய மாசேதுங் சிந்தனைகளை தனது வழிகாட்டியாக கொண்டவர். அவர் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப் பாதையை முன்னெடுத்த ஒரு புரட்சியாளர்.
தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்நாடு விடுதலைப்படை அமைத்து பரந்து பட்ட மக்களை அணிதிரட்ட அயராது பாடுபட்டவர்.
32 வருட தலைமறைவு வாழ்க்கை. அதில் சுமார் பத்து வருடங்கள் சிறை வாழ்க்கை. எத்தனையோ வழக்குகள். சித்திரவதைகள். இத்தனைக்கும் மத்தியில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமின்றி இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் தோழர் சுந்தரம்.
தோழர் சுந்தரம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஈழத் தமிழர்களை உறுதியாக ஆதரித்தவர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை எப்போதும் ஆதரித்து வந்தவர்.
ஈழத் தமிழர்களுக்கு அதரவாக இந்திய அரசுக்கு எதிராக வெடி குண்டு வீசி எச்சரித்தவர்.
நெருக்கடியான காலகட்டத்தில் ஈழத் தமிழருக்கான தமிழக மக்களின் ஆதரவை வெளிப்படுத்தியவர்.
அத்தகைய தோழர் சுந்தரத்தின் மறைவு ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்த தோழர் சுந்தரத்தின் பெயரை உச்சரிக்க ஈழ ஆதரவுத் தலைவர்களான வைகோ, ராமதாஸ், சீமான், திருமாவளவன் போன்றவர்கள் தவறலாம் அல்லது தவிர்க்கலாம்.
அதுபோல், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்த தோழர் சுந்தரத்தின் பெயரை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பொறிப்பதற்கு நெடுமாறன் அய்யா தயங்கலாம்; அல்லது தவிர்க்கலாம்.
ஆனால் தமக்காக குரல் கொடுத்த தோழர் சுந்தரத்தை ஈழத் தமிழ் மக்கள் என்றும் நன்றியுடன் தங்கள் மனங்களில் நினைவு கூருவர்.
ஈழத் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் தோழர் சுந்தரத்தின் பெயரும் நிச்சயம் இடம்பெறும்.
அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது அஞ்சலிகளையும் செவ் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் சுந்தரம் மரணமடைந்தபோது நான் எழுதிய அஞ்சலிக் குறிப்பை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம். இக் குறிப்பு “விடுதலை அறம்” இதழில் வெளிவந்துள்ளது.

No comments:

Post a Comment