Saturday, June 29, 2019

•ஆடுகள் எப்போதும் ஓநாயைத்தானே நம்புகின்றன !

•ஆடுகள் எப்போதும் ஓநாயைத்தானே நம்புகின்றன !
ஒரு நாள் அகதியாக இருந்து பார்
அப்போது அகதியின் வலி என்ன என்பதை உணர்வாய்
35 வருடம் அகதியாக இருக்கும் ஈழத் தமிழனின் வலியை
நீயும் ஒருநாள் உன் நாட்டை இழக்கும்போது உணர்வாய்.
ஒரு காலத்தில் எம்மிடம் ஒரு அழகான நாடு இருந்தது
ஒரு காலத்தில் எமக்கு வீரம் செறிந்த வரலாறும் இருந்தது.
ஆடுகள் எப்போதும் ஓநாயைத்தானே நம்புகின்றன
நாம் அண்ணாந்து வானைப் பார்த்துக் கொண்டிருந்தோம்
நாம் நம்பிய ஓநாய் வானில் வந்து உணவுப் பொட்டலத்தை வீசியது.
ஓநாய் வீசிய உணவுப் பொட்டலம் எமது கைக்கு வந்தது
எமது கையில் இருந்த எமது அழகிய தேசம் ஓநாய் கைக்கு சென்று விட்டது.
எமது கையில் இருந்த பலாலி விமான நிலையம்
எமது கையில் இருந்த திருகோணமலை துறைமுகம்
எமது கையில் இருந்த மன்னார் எண்ணெய் வளம்
எமது கையில் இருந்த புல்மோட்டை இல்மனைற் வளம்
எமது கையில் இருந்த 650 ஏக்கர் சம்பூர் மக்களின் நிலம்
எல்லாமே இன்று ஓநாய் கையில் சென்று விட்டது.
ஆனால,;
எமது (செம்மறி) ஆட்டு தலைவர்களோ உரத்து கூறுகிறார்கள்
ஓநாய் ஆடுகள் மீது மிகவும் இரக்கம் கொண்டதாம்.
ஓநாய் விரைவில் தீர்வு தரப் போவதால்
எமது அழகிய தேசத்தை தா என்று கேட்கக் கூடாதாம்.
என்ன செய்வது?
இந்த ஆடுகள் எப்போதும் ஓநாயைத்தானே நம்புகின்றன!
குறிப்பு - இன்று சர்வதேச அகதிகள் தினம் ( 20.06.19)

No comments:

Post a Comment