Saturday, June 29, 2019

காஸ்மீரில் எட்டு வயது சிறுமியை எட்டு நாட்களாக கோயிலினுள் வைத்து பாலியல் வல்லுறவு செய்து கொன்றவர்களுக்கு

காஸ்மீரில் எட்டு வயது சிறுமியை எட்டு நாட்களாக கோயிலினுள் வைத்து பாலியல் வல்லுறவு செய்து கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தண்டனை பெற்றவர்கள் உயர்நீதிமன்றத்தில் விடுதலை பெறலாம். அல்லது அரசுகூட முன்கூட்டியே இவர்களை விடுதலை செய்யலாம்.
அதுமட்டுமல்ல நாளை இவர்கள் இதற்காக ஒரு எம் பி யாகவோ அல்லது அமைச்சராகவோ ஆகினால்கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஏனெனில் இப்போது,
3000 முஸ்லிம்களை கொன்றவர் பிரதமர்.
நீதிபதியையே கொலை செய்தவர் உள்துறை அமைச்சர்.
கிருத்தவ பாதிரியாரை இரு குழந்தைகளுடன் எரித்துக் கொன்றவர் மத்திய அமைச்சர்.
மலேகான் குண்டு வெடிப்பு சூத்திரதாரி நாடாளுமன்ற உறுப்பினர்.

No comments:

Post a Comment