Saturday, June 29, 2019

•இவர்கள் மெண்டல்களா?

•இவர்கள் மெண்டல்களா? அல்லது
தமிழ்மக்களை மெண்டல்களாக்கப் பார்க்கிறார்களா?
யாழ் இந்திய தூதர் அகிம்சையை போதித்த காந்தியின் பெயரால் சயிக்கிள் பேரணி நடத்தியுள்ளார்.
அதுமட்டுமல்ல அவர் வடக்கு கிழக்கில் 20 காந்தி சிலைகளையும் நிறுவப் போவதாக எற்கனவே கூறியிருக்கிறார்.
இந்தியாவில் காந்தியைச் சுட்ட கோட்சேக்கு விழா எடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல பணத்தில் இருக்கும் காந்தியையே எடுக்க வேண்டும் எனவும் கூற ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் யாழ் இந்திய தூதரோ வடக்கு கிழக்கில் எப்படியும் காந்தியை பரப்பியே தீருவது என்று அடம் பிடிக்கிறார்.
சரி. பரவாயில்லை. ஆனால் இதே வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் காந்தியின் அகிம்சை வழியில் போராடி வருகிறார்கள். ஆனால் இந்த இந்திய தூதர் இதுவரை இதுபற்றி வாய் திறக்கவேயில்லை.
பார்ப்பவர்களுக்கு இந்த இந்திய தூதர் “என்ன மெண்டலா?” என நினைக்க தோன்றும். ஆனால் அவர் சாதாரண மெண்டல் இல்லை. விபரமான மெண்டல்.
ஏனெனில் கடந்த 28ம் தேதி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு இரகசியமாக வழங்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு கொடுக்கப்பட்டு விட்டது என்று எதிர்ப்பு தெரிவித்த எவரும் கொழும்பு துறைமுகம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது குறித்து மூச்சே காட்டவில்லை.
இப்போது கூறுங்கள் எந்தவித எதிர்ப்பும் இன்றி கொழும்பு துறைமுகத்தை பெற்ற இந்திய தூதர் சாதாரண மெண்டலா? அல்லது விபரமான மெண்டலா ?
அடுத்தவர் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன். அவரை “ஈழத்துகாந்தி” என்று அழைக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் கண்ணியாவில் பிள்ளையார் கோவிலை இடித்துவிட்டு புத்த விகாரை கட்டுகிறார்கள். அதைப் பற்றி இவருக்கு அக்கறை இல்லை.
காணாமல் போனவர்களின் உறவுகள் 800 நாட்களாக போராடி வருகிறார்கள் . அதைப்பற்றியும் இவருக்கு அக்கறை இல்லை.
அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி வருகிறார்கள். அதைப் பற்றியும் இவருக்கு அக்கறை இல்லை.
ஆனால் கண்டியில் உண்ணாவிரதம் இருக்கும் புத்த பிக்குவிற்கு ஆதரவாக இவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.
என்ன செய்வது? 50 கோடி ரூபா வாங்கிக்கொண்டு மகிந்த ராஜபக்சவை ஆதரித்தவர் தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதம் இருப்பார் என எதிர்பார்க்க முடியாதுதான்.
ஆனால் இவர்கள் இருவரும் தமிழ் மக்களை மெண்டல்களாக்கப் பார்க்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

No comments:

Post a Comment