Saturday, June 29, 2019

•ஆறுதல் தரும் செய்தி

•ஆறுதல் தரும் செய்தி
கடந்த 7 நாட்களாக திருச்சி சிறப்புமுகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்தவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர்.
15 நாட்களில் விடுதலை செய்யப்படும் என தமிழக அரசு வழங்கிய உறுதி மொழியை அடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.
இவ் அகதிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.
தற்போது திருச்சி சிறப்புமுகாமில் 37 ஈழ தமிழ் அகதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்புமுகாம் மூடப்பட வேண்டும்.

No comments:

Post a Comment