Saturday, June 29, 2019

ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை தூக்கி எறியும் பலாத்கார நிகழ்வே புரட்சி என்றார் காரல் மார்க்ஸ்

ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை தூக்கி எறியும் பலாத்கார நிகழ்வே புரட்சி என்றார் காரல் மார்க்ஸ்
தேர்தல் பாதை மூலம் விடுதலை பெறலாம் என தோழர் சே கூறவில்லை. மாறாக போராடியே எதையும் பெற முடியும் என்றார்.
கோழிக்குஞ்சு கூட வன்முறையை பாவித்தே முட்டையை உடைத்து வெளியே வருகிறது.
கடவுள் கந்தன்கூட அகிம்சை மூலம் சூரனை அழிக்கவில்லை. வன்முறை மூலமே அழித்தார்.
கையில் வேல், வாள், சூலம் போன்ற ஆயுதங்களை வைத்திருக்கும் கடவுள்களை பயங்கரவாதிகள் என்று கூறுவதில்லை.
ஆனால் எமது விடுதலைக்காக துப்பாக்கி ஏந்தினால் எம்மை பயங்கரவாதிகள் என்று சம்பந்தர் ஐயா கூறுகிறார்
.
பிரதமர் மோடி தமிழ்நாட்டு தமிழர்களுக்கு காவிரி தண்ணீர் இன்னும் திறந்துவிடவில்லை.
பிரதமர் மோடி தமிழ்நாட்டு தமிழர்கள் மீதான இந்தி திணிப்பை நிறுத்த வில்லை
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் எட்டுவழிச்சாலை மற்றும் ஹைரோகார்பன் திட்டங்களை கைவிடவில்லை.
பிரதமர் மோடி வருடம் 85000கோடி ரூபாவை தமிழ்நாட்டில் இருந்து வரியாக பெறுகிறார். ஆனால் குஜராத்திற்கு பூங்கா அமைக்கிறார். கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவை கொட்டுகிறார்.
தன் சொந்த நாட்டு தமிழர்களுக்கே எதுவும் செய்யாத பிரதமர் மோடி ஈழத் தமிழர்களுக்கு உதவப் போகிறார் என்று சம்பந்தர் ஐயா கூறுகிறார்.
தேர்தல்பாதை மூலம் சம்பந்தர் ஐயாவுக்கு பதவி பங்களா கிடைக்கலாம். ஆனால் தமிழர்களுக்கு ஒரு ம - - ம் கிடைக்காது.
அதுமட்டுமல்ல சம்பந்தர் ஐயா கூறுவதுபோல் இந்தியா மூலமும் எந்த தீர்வும் தமிழர்களுக்கு கிடைக்கப் போவதில்லை.
மாறாக தோழர் சே கூறியதுபோல் போராடியே எந்த தீர்வையும் தமிழ் மக்கள் பெறமுடியும்.

No comments:

Post a Comment