Saturday, June 29, 2019

தூரம் அதிகம் இல்லை

தூரம் அதிகம் இல்லை
இதோ தெரியுது எதிரி எல்லை
தமிழர் எல்லாம் எழுந்து நின்றால்
இந்த எதிரிகளுக்கு இனி பதவி இல்லை
சுமந்திரன் - சேர், இனி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது போல் இருக்கு. சுற்றிவர ஆர்மி பொலிஸ் எல்லாம் இருந்தும் கொஞ்சம்கூட பயமின்றி செருப்பு எறியிறாங்க. அடிக்க வராங்க. பயமாய் இருக்கு.
ரணில் - என்ன சுமந்திரன்? வழக்கம்போல் “இது தமிழர்கள் உருவாக்கிய நல்லாட்சி. இதை எதிர்த்தால் மீண்டும் மகிந்த ஆட்சி வந்திடும்” என்று சொல்ல வேண்டியதுதானே?
சுமந்திரன் - சொன்னேன் சேர். சொன்ன பிறகுதான் செருப்பே எறிந்தாங்களே. போற போக்கைப் பார்த்தால் அடுத்த எலெக்சனில் பத்து வோட்டு கூட வாங்க முடியுமோ தெரியவில்லை.

No comments:

Post a Comment