Sunday, February 26, 2023

விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக

விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க தீர்மானித்தபோது அவர் மகளைப்பற்றி அநாகரீகமாக ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். உடனே கலைஞரின் மகள் கனிமொழி அம்மையார் தமிழத்தேசியம் பேசும் எல்லோரும் இப்படித்தான் அநாகரிகமாக எழுதுபவர்கள் எனக் குறிப்பிட்டு காவல்துறையிடம் முறையிட்டார். விசாரணையின்போது அந்த நபர் மலையகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவழி தமிழர் என்பதும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் என்பதும் தெரியவந்தது. இவ்வாறு உண்மை தெரியவந்த பின்பும் தமிழத்தேசியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டிற்கு கனிமொழி அம்மையார் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. அத்தோடு அவரின் திராவிட தம்பி ஒருவர் எனக்கு எழுதிய இப் பதிவை அவரின் கவனத்திற்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். யார் அநாகரிகமாக எழுதுபவர்கள் என்பதை அவர் இனி முடிவு செய்யட்டும்.

No comments:

Post a Comment