Sunday, February 26, 2023

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது,

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது, (அ)சிங்கள அரசுக்கு, (1) வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் பல்லாயிரம் சிங்கள ராணுவத்தை வைத்திருக்க உதவும் (2) சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் வைத்திருக்க உதவும் (3) காணமல் ஆக்கப்பட்டடோரை கண்டறியாமல் விடுவதற்கு உதவும் (4) இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றம் செய்யாமல் இருப்பதற்கு உதவும் (5) பல பில்லியன் டொலர் பணத்தை பட்ஜட்டில் ராணுவத்திற்கு ஒதுக்குவதற்கு உதவும் (6) ”புலிகளை அடக்குவேன்” என்று சொல்லி மீண்டும் வருவதற்கு மகிந்தராஜபக்சவுக்கு உதவும் (7) ”புலிகளின் பிரதிநிதிகள்” என்று கூறி தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை செய்வதை தவிர்க்க உதவும் (ஆ) இந்திய அரசுக்கு, (1) தொடர்ந்து புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கு உதவும் (2)சிறையைவிடக் கொடிய சிறப்புமுகாமை வைத்திருக்க உதவும் (3)அகதிகளுக்கு குடியுரிமை வழங்காமல் இருக்க உதவும் (4)கடலில் தமிழக மீனவர் கொல்லப்படுவதை கண்டுக்காமல் இருக்க உதவும் (5) தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்காமல் இருக்க உதவும் அதைவிட,, • தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு தலைமை உருவாவதை தடுக்கிறது. • தமிழ்மக்கள் மீண்டும் போராடாமல் பிரபாகரன் வருகைக்காக காத்திருக்க வழி செய்கிறது. • பிரபாகரன் மரணம் குறித்து உண்மையை அறியா வண்ணம் மக்களை தடுக்கிறது. • புலிகளின் சொத்தை புலத்து வியாபாரிகள் தொடர்ந்து அனுபவிக்க உதவுகிறது. • சில தமிழக அரசியல்வாதிகளுக்கு ஏமாற்று அரசியல் செய்ய உதவுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனது 10வயது மகனைக்கூட காப்பாற்றாமல் தான் மட்டும் தப்பினார் பிரபாகரன் என்ற பழிச்சொல்லுக்கு வழி வகுக்கிறது. இத்தனை வருடமாகியும் வராமல் ஏன் ஒளித்து இருக்கிறார் என்று மக்கள் விசனப்பட வைக்கிறது. மேலும் அவருக்கு ஒரு வீர வணக்கம்கூட செலுத்தமுடியாத நிலையில் தமிழினத்தை வைத்திருக்கிறது.

No comments:

Post a Comment