Sunday, February 26, 2023

தனது சொந்த நாட்டில்

தனது சொந்த நாட்டில் சொந்த மக்களையே பாலியல் வல்லுறவு செய்யும் இந்திய ராணுவம், ஈழத்தில் எப்படி நடந்துகொண்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். 800க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்டதாக அறிய வருகிறது. இதற்காக இதுவரை ஒரு ராணுவவீரனாவது தண்டிக்கப்பட்டானா? இல்லையே. ஆனால் இத்தனைக்கும் காரணமான ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு கண்ணீர் வடிப்போர் ராஜீவ் காந்தியால் ஈழத்தில் கொல்லப்பட்ட பன்னிரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்காக கண்ணீர் வடிப்பதில்லை. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் ராஜிவ் காந்தி உயிர் மட்டுமே உயிர். ஈழத் தமிழர்களின் உயிர் எல்லாம் மயிர். அப்படிதானே?

No comments:

Post a Comment