Monday, November 30, 2015

•இலங்கை அரசே! தோழர் குணரட்ணத்தை உடனே விடுதலை செய்!

•இலங்கை அரசே!
தோழர் குணரட்ணத்தை உடனே விடுதலை செய்!
எதற்காக இவர் கைவிலங்கு இடப்பட வேண்டும்?
எதற்காக இவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும்?
இவர் செய்த கொடிய குற்றம்தான் என்ன?
இவர் ஒரு இலங்கையர். இவர் தன்னை இலங்கையில் தங்க அனுமதிக்கும்படி கோருவது குற்றமா?
இவர் ஒரு இலங்கையர். இவர் ஒரு கட்சிக்கு தலைமை தாங்கி மக்களுக்காக போராடுவது குற்றமா?
இவர் ஒரு இலங்கையர். இவர் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கோரியது குற்றமா?
இவர் ஒரு இலங்கையர். இவர் சகல இன மக்களுக்கும் சமவுரிமை வழங்கவேண்டும் என்று கோருவது குற்றமா?
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்களை கொன்ற மகிந்த ராஜபக்ச இன்னும் கைது செய்யப்படவில்லை.
வெள்ளைவானில் மக்களை கடத்தி கொலை செய்த கோத்பாயா இன்னும் கைது செய்யப்படவில்லை
பல கோடி மக்கள் பணத்தை ஊழல் செய்த பசில் ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடவுச்சீட்டு மோசடி செய்த விமல் வீரவம்சவுக்கு கைவிலங்கு போடப்படவில்லை.
ஆனால் தோழர் குமார் குணரட்ணம் கைவிலங்கு போடப்படுவது ஏன்?
தோழர் குமார் குணரட்ணத்திற்கு பிணையில் விடுதலை செய்ய மறுப்பது ஏன்?
தோழர் குமார் குணரட்ணம் இலங்கையில் தங்கி அரசியல் செய்ய அனுமதி மறுப்பது ஏன்?
இதுதான் நல்லாட்சியா?

No comments:

Post a Comment