Monday, November 30, 2015

• என்ன கொடுமை இது?

• என்ன கொடுமை இது?
இஸ்லாம் மதத்தை கைவிட்டார் என்பதற்காக மரணதண்டனை தீர்ப்பளித்துள்ளது சவூதி அரோபிய நீதிமன்றம்.
சவூதி அரோபியாவில் வசித்து வரும் பாலஸ்தீன கவிஞர் ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இலங்கை பெண் ஒருவருக்கும் இன்னொரு இலங்கை நபருடன் உறவு கொண்டார் என்பதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் மதத்தை பின்பற்றுவதும், பின்பற்றாமல் இருப்பதும் அவரது தனிமனித சுதந்திரம். இதில் அரசு தலையிடக்கூடாது.
அதேபோல் 18 வயதிற்கு மேற்பட்ட இருவர் தமது விருப்பத்துடன்; உறவு கொள்வதையும் மரண தண்டனைக் குற்றமாக கருதுவது தவறாகும்.
சவூதியில் இருந்து வரும் பெற்றோலை வாங்குவதற்காகவும் தமது ஆயுதங்களை சவூதிக்கு விற்பதற்காகவும் வல்லரசு நாடுகள் சவூதியின் காட்டுமிராண்டித்தனமான இத்தகைய தீhப்புகளை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றன.
சவூதியின் சர்வாதிகார மன்னராட்சி சவூதி மக்களுக்கு மட்டுமல்ல உலக மக்களுக்கே ஆபத்தானதாக விளங்குகிறது.
மத பயங்கரவாதத்தை வளர்த்து வரும் சவூதி மன்னராட்சியை தூக்கியெறிந்து அங்கு மக்கள் ஆட்சி மலர சவூதி மக்களின் போராட்டத்திற்க உலக மக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment