Monday, November 30, 2015

அடாது மழை பெய்தாலும் விடாது சூரன் போர் செய்யும் பக்தர்கள்!

•அடாது மழை பெய்தாலும் விடாது சூரன் போர் செய்யும் பக்தர்கள்!
அமெரிக்கன் செவ்வாய்க்கு ராக்கட் விடுகிறான். ஆனால் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி வெள்ளத்தில் சூரன் போர் செய்யுது. இந்த அவலத்தை என்னவென்று அழைப்பது?
யாழ் மாவட்டத்தில் 53470 பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் மழையால் முருகனுக்கு சூரன் போர் செய்ய முடியவில்லையே என சிலர் கவலைப்படுகிறார்கள். இந்த அவலத்தை என்னவென்று அழைப்பது?
சிறையில் நம்மவர்கள் வாடுகிறார்கள். ஆனால் மாத்தளை முத்துமாரியம்மன் கோவிலில் பிக்கப்பில் சூரன் போர் செய்கிறார்கள். இந்த அவலத்தை என்னவென்று அழைப்பது?
இந்த முட்டாள்களை திருத்த ஒரு பெரியார் நமது மண்ணில் தோன்றமாட்டாரா என ஏங்க வைக்கிறது!

No comments:

Post a Comment