Monday, November 30, 2015

•தீ பரவட்டும்!

•தீ பரவட்டும்!
மக்கள் போராட்டம் வெடிக்கட்டும்!!
சிறப்புமுகாம்கள் மூடப்படட்டும்!!
அகதிகள் விடுதலை பெறட்டும்!!
நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூலை தமிழ்தேச மக்கள் கட்சியினர் சென்னையில் வெளியிட்டார்கள்.
கோவையில் நூல் அறிமுகம் செய்தார்கள். செய்யாறில் நூல் அறிமுகம் செய்தார்கள். திருச்சியில் நூல் அறிமுகம் செய்தார்கள்.
27.11.15 யன்று திருச்சியில் உள்ள சிறப்புமுகாமை முற்றுகையிட்டு போராட்டம் செய்யவுள்ளார்கள்.
சிறு பொறி பெரும் காட்டு தீயை உருவாக்கும் என்பது போல் தமிழ்தேச மக்கள் கட்சியினரின் போராட்டம் மாபெரும் மக்கள் போராட்டமாக மாற வேண்டும்.
சிறப்புமுகாம்கள் மூடப்பட்டு அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவும் விடுதலை பெற வேண்டும்.
தமிழக மக்களே அணி திரளுங்கள்.
சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை பெற வழிசெய்யுங்கள்.

No comments:

Post a Comment