Monday, November 30, 2015

•நாபா விதைக்கப்படவில்லை. அவர் புதைக்கப்பட்டிருக்கிறார்.

•நாபா விதைக்கப்படவில்லை.
அவர் புதைக்கப்பட்டிருக்கிறார்.
நாபாவின் கட்சி யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகளைக் கடத்தியபோது இதே இந்திராகாந்திதான் சென்னையில் நாபாவை பிடித்து ஓட்டலில் வைத்து மிரட்டி அந்த தம்பதிகளை விடுவித்தவர் என்பதை இவர்கள் அறிவார்களா?
புரட்சியை முன்னெடுப்பதாக கூறிய நாபாவை புரட்சிக்கு எதிரான இந்திராகாந்தியுடன் ஒப்பிடுவது நாபாவை அசிங்கப்படுத்துவதாக இருக்காதா? இதைவிட நாபாவை அசிங்கப்படுத்த முடியுமா?
நாபா முன்வைத்த ஈழம் கைவிட்டாச்சு!
நாபா முன்வைத்த ஈழவிடுதலை கைவிட்டாச்சு!!
நாபா முன்வைத்த புரட்சியும் கைவிட்டாச்சு!!!
அப்புறம் "ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி" பெயர் மட்டும் எதற்கு?
அவரை நினைவு கூர என்ன இருக்கு??
அமைதிப்படை என்று வந்து பல்லாயிரம் தமிழர்களை அழித்தது இந்திய அரசு.
முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் மக்களை அழிக்க உதவி புரிந்ததும் இந்திய அரசு.
இத்தகைய இந்திய அரசை தொடர்ந்தும் "நாபா" வழியில் ஆதரிக்கப் போகிறீர்களா?
நாபா விதைக்கப்படவில்லை. அவர் புதைக்கப்பட்டிருக்கிறார். அவரில் இருந்து இனி ஒருபோதும் புரட்சியாளர்கள் முளைக்கப்போவதில்லை.

No comments:

Post a Comment