Monday, November 30, 2015

திருச்சி சிறப்புமுகாம் முற்றுகை போராட்டம்!

• திருச்சி சிறப்புமுகாம் முற்றுகை போராட்டம்!
திருச்சியில் உள்ள சிறப்புமுகாமை முற்றுகையிட்டு தமிழ்தேச மக்கள் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சிறப்புமுகாம்களை மூடுமாறும் அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறும் அவர்கள் கோரினார்கள்.
முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழ்தேச மக்கள் கட்சியினர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டமை கண்டிக்கத்தக்கது.
தமிழ்தேச மக்கள் கட்சியினர் மற்றும் தமிழக மக்கள் சிறப்புமுகாம்களை மூடுமாறு குரல் எழுப்பி வருவது, சிறப்புமுகாம்கள் விரைவில் மூடப்படும் என்ற நம்பிக்கையை தோற்றுவிக்கிறது.
வெளியே தமது விடுதலைக்காக தமிழக மக்கள் குரல் எழுப்புவது உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு நிச்சயம் ஆறுதல் தரும் விடயம் ஆகும்.
சிறப்புமுகாமை மூடுமாறு குரல் எழுப்புவோரின் உணர்வுகள் உண்மையிலே பாராட்டப்படவேண்டியதாகும்.

No comments:

Post a Comment