Monday, November 30, 2015

• லண்டனில் நடைபெற்ற நினைவுப் பகிர்வு நிகழ்வு

• லண்டனில் நடைபெற்ற நினைவுப் பகிர்வு நிகழ்வு
லண்டன் ஈஸ்ட்காம் நகரில் 14.11.15 யன்று மாலை 4 மணியளவில் தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் நினைவுப்பகிர்வு நிகழ்வு நடைபெற்றது.
முதலாவது அமர்வாக காலம் சென்ற கவிஞர் திருமாவளவன் அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு இடம்பெற்றது.
மு.புஸ்பராஜன் அவர்கள் இவ் நிகழ்விற்கு தலைமையேற்று வழி நடத்தினார்.
திருமாவளவனின் படைப்புலகம் என்னும் தலைப்பில் ஏ.எம்.ரஸ்மி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கஜன் அவர்கள் திருமாளவனின் ஜந்து கவிதைகளை படித்துக்காட்டினார்.
இரண்டாவது அமர்வாக காலம் சென்ற டேவிட் அய்யா அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு இடம்பெற்றது.
டாக்டர் ராஜசுந்தரம் அவர்களின் சகோதரர் கனகசுந்தரம் அவர்கள் நிகழ்விற்கு தலைமையேற்று வழி நடத்தினார்.
டேவிட் அய்யாவின் பங்களிப்பும் அவரது பாத்திரமும் என்னும் தலைப்பில் பி.ஏ.காதர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
வலி சுமந்த மனிதன்- சில குறிப்பகள் என்னும் தலைப்பில் நா.சபேசன் உரையாற்றினார்.
இறுதியாக எம்.பௌசர் நிகழ்வுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பார்வையாளர்கள் பலரும் டேவிட் அய்யாவுடான தமது அனுபவங்களை பகிர்ந்தார்கள்.
இந்த நிகழ்வில் டேவிட் அய்யா பற்றிய "அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்" , திருமாவளவனின் கவித்தொகையான "சிறு புள் மனம்"ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
குறிப்பு- காந்தியவாதியான டேவிட் அய்யா அவர்கள் புலிகள் மேற்கொண்ட அநுராதபுர படுகொலைகளை ஆதரித்தார் என்று நா.சபேசன் தனது உரையில் கூறினார். இது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

No comments:

Post a Comment