Monday, November 30, 2015

தோழர் குமார் குணரட்ணம் விடுதலை கோரி லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

 தோழர் குமார் குணரட்ணம் விடுதலை கோரி
லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
இன்று (06.11.15) மதியம் 1.00 மணியளவில் லண்டனில் உள்ள இலங்கை தூதரலாயத்திற்கு முன்பாக தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னிலை சோசலிசக்கட்சியின் லண்டன் கிழையும் சமவுரிமை இயக்கமும் இவ் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.
குறுகியகால அழைப்பு. மழை குளிர் வேறு. இருப்பினும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலதரப்பட்ட மக்கள் கலந்துகொண்டு குரல் எழப்பினார்கள்.
தமிழ் சிங்கள இன மக்கள் ஒற்றுமையாக நின்று இலங்கை அரசுக்கு எதிராக குரல் எழுப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக முன்னிலை சோசலிசக் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்தமைக்காக எற்கனவே லலித் குகன் என்ற இரு முன்னிலை சோசலிசக்கட்சி தோழர்கள் கோத்தபாயாவினால் வெள்ளைவானில் கடத்தப்பட்டார்கள்.
தற்போது அதன் தலைவர் தோழர் குமார் குணரட்ணம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக்கோரி இலங்கையில் பல அமைப்புகள் கோரி வருகின்றன.
ஆனால் சம்பந்தர் அய்யா அவர்கள் தமிழ் இனம் சார்பாக கேட்காவிடினும் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தோர் குணரட்ணத்தை விடுதலை செய்யும்படி இன்னும கோராதது ஆச்சரியமாகவும் சந்தேகமாகவும் இருக்கிறது.

No comments:

Post a Comment