Monday, November 30, 2015

"நல்லாட்சி" அரசின் காதுகளுக்கு இந்த அப்பாவிகளின் குரல் கேட்பதில்லையா?

•"நல்லாட்சி" அரசின் காதுகளுக்கு
இந்த அப்பாவிகளின் குரல் கேட்பதில்லையா?
கொட்டும் மழையிலும் நனைந்தபடி தமது உறவுகளை தேடும் இவர்கள் குரல் நல்லாட்சி அரசின் காதுகளுக்கு கேட்கவில்லையா?
கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்று ஒரு அப்பாவி மாணவன் தன் உயிரைக் கொடுத்து கேட்டானே. அது கூட இவர்களின் காதுகளுக்கு கேட்கவில்லையா?
சிறுவன் போராடினால் "குழந்தைப்போராளி" என்று ஒப்பாரி வைத்தவர்கள் இப்போது ஒரு சிறுவன் இறந்தபொது மௌனமாக இருக்கின்றார்களே! எங்கே போனது இவர்களது சிறுவர் மீதான அக்கறை?
ஆயுதம் ஏந்திப் போராடினால் பயங்கரவாதம் என்றீர்கள். இப்போது அமைதி வழியில் போராடினால் கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்களே? மீண்டும் மக்களை ஆயதம் ஏந்த வைக்கப்போகிறீர்களா?
சம்பந்தர் அய்யா அவர்களே!
உறங்கியது போதும், விழித்தெழுங்கள்.
உங்களுக்கு வாக்கு போட்ட மக்கள் வீதியில் நிற்பதை கொஞ்சம் பாருங்கள்.
உங்களின் நல்லாட்சி அரசிடம் உரத்து கூறுங்கள் "கைதிகளை விடுதலை செய்யம்படி".

No comments:

Post a Comment