Friday, April 29, 2016

•வலியை அனுபவித்தவனுக்கு இன்னொருவனின் வலியை புரிந்துகொள்ள முடியும்

•வலியை அனுபவித்தவனுக்கு இன்னொருவனின் வலியை புரிந்துகொள்ள முடியும்
கொடியை எரித்தமைக்காக திலீபன் மகேந்திரன் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டு சட்ட விரோதமாக கை முறிக்கப்பட்டவர்.
சுபேந்திரன் என்ற ஈழ அகதி தமிழக காவல்துறையால் விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்டு கால் முறிக்கப்பட்டவர்.
எழுந்து நடமாட முடியாத நிலையில் இருக்கும் சுபேந்திரன் வேலையின்றி வருமானம் இன்றி அவரது குடும்பம் மிகவும் கஸ்டப்படுகிறது.
வாழ வழியின்றி தற்கொலை செய்யலாமோ என நினைத்த அந்த குடும்பத்தை சந்தித்து திலீபன் ஆறுதல் கூறியிருக்கிறார்.
ஆறுதல் கூறியது மட்டுமல்ல அவர்களுக்கு தன் நண்பர்களிடமிருந்து உதவி பெற்றும் கொடுக்கிறார்.
தானே வழக்கிலும் கஸ்டங்களிலும் இருக்கும் நிலையிலும் அந்த அகதிக் குடும்பத்தை சந்தித்து அவர்களுக்கு உதவியிருக்கும் திலீபனின் உணர்வுகள் பாராட்டுக்குரியது.
இத்தகைய திலீபன் கொடியை எரித்தபோது அவரை தேச துரோகி என்றார்கள். சிலர் அவரை தமிழன் அல்ல என்றார்கள்.
இன்னும் சிலர் அவரை ஆதரித்தமைக்காக எம்மை துரோகிகள் என்றார்கள்.
ஏமக்காக வீர வசனம் பேசிவிட்டு எம்மை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் மத்தியில் திலீபன் போன்றவர்களின் செயற்பாடு எமக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கிறது.
திலீபனுக்கு எமது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment