Friday, April 29, 2016

•அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். மனு மேல் மனு கொடுத்தாலும் சம்பந்தர் அய்யாவின் மனம் மட்டும் இரங்க மறுக்கிறதே!

•அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.
மனு மேல் மனு கொடுத்தாலும் சம்பந்தர் அய்யாவின் மனம் மட்டும் இரங்க மறுக்கிறதே!
ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலை குறித்து,
ஜெயா அம்மையார் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார்
கலைஞர் கருணாநிதி விடுதலை செய்யும்படி கோரியுள்ளார்.
வைகோ அவர்களின் விடுதலைக்காக பாடுபட்டு வருகிறார்.
டாக்டர் ராமதாஸ் அவர்களும் விடுதலை செய்யும்படி கேட்டுள்ளார்.
சீமான் அவர்களை சிறையில் சென்று பார்த்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் விடுதலை செய்யும்படி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார்.
ராகுல்காந்திகூட மத்திய அரசு என்ன முடிவு எடுத்தாலும் ஆட்சேபனை இல்லை என்று கூறியுள்ளார்.
ஆனால்,
சம்பந்தர் அய்யா மட்டும் இதுவரை ஒருமுறைகூட அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
முருகனின் விடுதலைக்கு உதவும்படி அவரது தாயார் சம்பந்தர் அய்யாவிடம் மன்றாடிக் கேட்டும் அவர் மனம் இரங்கவில்லை.
எழுவர் விடுதலைக்காக செங்கொடி என்ற இளம் பெண் தீக்குளித்து இறந்தபோதும்கூட சம்பந்தர் அய்யாவின் மனம் இரங்கவில்லை.
தனது இருதய சிகிச்சைக்காக இந்திய அரசிடம் கேட்டுப் பெற்ற சம்பந்தர் அய்யா பேரறிவாளனின் இருதய சிகிச்சைக்கு அதே இந்திய அரசிடம் குரல் கொடுக்க மனம் இரங்கவில்லை.
இந்த வயதிலும்கூட தன் மகளுக்காக கேரளாவில் இருந்துவரும் சம்பந்தர் அய்யா 25 வருடங்களாக பெற்றாரை பிரிந்து வாழும் முருகன் மகளுக்காக மனம் இரங்கவில்லை.
தான் இறப்பதற்கு முன்னர் தன் மகன் சாந்தனை ஒரு முறை பார்க்க விரும்புகிறேன் என்று முதுமையில் வாடும் அவர் தாயார் கேட்டும்கூட சம்பந்தர் அய்யாவின் மனம் இரங்கவில்லை.
இந்த எழுவர் விடுதலைக்காக,
தமிழக தலைவர்கள் குரல் கொடுக்கிறார்கள்
தமிழக மாணவர்கள் போராடுகிறார்கள்.
தமிழக மக்கள் அதரவு தெரிவிக்கிறார்கள்.
ஆனால் ஈழத் தமிழ் மக்களின் தலைவர் என்று தன்னைக்கூறிக்கொள்ளும் சம்பந்தர் அய்யா மனப்பூர்வமாக இல்லாவிடினும் சம்பிரதாயபூர்வமாகக்கூட அறிக்கை தர மனம் இரங்கவில்லை.
இந்த எழுவரை விடுதலை செய்ய இந்திய அரசு மறுக்கிறது.
சிறப்புமுகாமில் அடைத்து வைத்துள்ள அகதிகளை விடுதலை செய்ய இந்திய அரசு மறுக்கிறது.
பல வருடமாக வாழும் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்க இந்திய அரசு மறுக்கிறது
தமிழ் அகதிகளின் உயர் கல்வி வாய்ப்பை இந்திய அரசு மறுக்கிறது.
டில்லி சென்று இந்திய பிரதமரை அடிக்கடி சந்திக்கும் சம்பந்தர் அய்யா இவை குறித்து பேச மறுக்கிறார்.
சம்பந்தர் அய்யா செய்வதெல்லாம்,
வாரம் தவறாமல் இந்திய தூதுவரின் தண்ணிப் பார்ட்டியில் கலந்துகொள்வது.
இந்திய தூதுவரை திருப்திபடுத்த சீனா வரப்போகுது என்று அறிக்கைவிடுவது
பாராளுமன்றத்தில் எதுவும் பேசாமல் எப்போதும் நித்திரை கொள்வது.
தமிழ் மக்கள் குறைகளை சொல்லும்போது காது கேளாத மாதிரி நடந்து கொள்வது
சம்பந்தர் அய்யாவிடம்,
சம்பூர் மக்கள் மனுக் கொடுத்துள்ளார்கள்
முல்லைத்தீவு மக்கள் மனுக் கொடுத்துள்ளார்கள்.
கிளிநொச்சி மக்கள் மனுக்கொடுத்துள்ளார்கள்.
காணாமல் போனோரின் உறவினர்கள் மனுக்கொடுத்துள்ளார்கள்.
அரசியல் கைதிகள் மனுக் கொடுத்துள்ளார்கள்.
இப்போது முருகனின் தாயாரும் மனுக்கொடுத்துள்ளார்.
எத்தனை மனுக் கொடுத்தாலும் தமிழ் மக்களுக்கு உதவ சம்பந்தர் அய்யாவின் மனம் மட்டும் இரங்குதில்லை.

No comments:

Post a Comment