Friday, April 29, 2016

•திருக்கேதீஸ்வரத்தில் கோயில் கட்டும் இந்தியா சம்பூரில் தமிழர்களுக்கு சமாதி கட்டுகிறது.

•திருக்கேதீஸ்வரத்தில் கோயில் கட்டும் இந்தியா
சம்பூரில் தமிழர்களுக்கு சமாதி கட்டுகிறது.
தமிழ்மக்களின் நலனுக்காக திருக்கேதீஸ்வரத்தில் 27 கோடி ரூபா செலவில் கோயில் கட்டுவதாக கூறும் இந்தியா, சம்பூரில் தமிழ் மக்கள் நலனுக்கு எதிராக அனல்மின் நிலையம் கட்டுகிறது.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு என்றும் இந்தியாவையும் விசாரணை செய்ய வேண்டும் என்று நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழ்மக்களை அழிக்க உதவி புரிந்த இந்தியா தற்போது சம்பூரில் நேரிடையாக தமிழ் மக்களுக்கு சமாதி கட்டுகிறது.
இந்த அனல்மின் நிலையத்திற்கு எதிராக தமிழ் மக்கள் போராடுகிறார்கள். முஸ்லிம் மக்கள் போராடுகிறார்கள். ஆதிவாசி மக்களாகிய வேடவ மக்கள்கூட போராடியிருக்கிறார்கள்.
இலங்கையில் அனைத்து இன மக்களும் ஒன்றுதிரண்டு எதிர்க்கும் திட்டம் இந்த அனல்மின் நிலையம் மட்டுமே.
ஆனால் எந்த தடைகள் வந்தாலும் அனல்மின் நிலையத்தை அமைத்தே தீருவோம் என்று மின்சார அமைச்சர் கூறுகிறார்.
இதுபற்றி சம்பந்தர் அய்யாவிடம் முறையிட்டால் அவரோ, இந்தியா போனால் சீனா வந்துவிடும் என மக்களை மிரட்டுகிறார்.
இப்படி தமிழ் மக்களை இந்தியாவிடம் சாகும்படி கூறுபவரை தமிழ் இனத் தலைவர் என்கிறார்கள். அவருக்கு நம்மவர் சிலர் கனடாவில் "வாழ்நாள் வீரர்" பட்டம் கொடுக்கிறார்கள்.
ராணுவத்தை வெளியேற்றுங்கள் என்று கேட்டால் சாவகச்சேரியில் தற்கொலை அங்கியை வைத்துவிட்டு எடுத்துக்காட்டுகிறது நல்லாட்சி அரசு.
யுத்தத்திற்கு பின்பு இதுவரை 313 தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வளவு காலமும் மௌனமாக இருந்த சம்பந்தர் அய்யா இந்த முறைமட்டும் கடும் நடவடிக்கை எடுங்கள் என்று அரசைக் கேட்டுள்ளார்.
சம்பூர் மக்களுக்காக அரசைக் கேட்காதவர், ராணுவத்தை குறையுங்கள் என்று அரசைக் கேட்காதவர், தற்கொலை அங்கி எடுத்தவுடன் மட்டும் கடும் நடவடிக்கை எடுங்கள் என்று அரசைக் கேட்கிறார்.
இன்னும் எத்தனை நாளைக்கு தமிழ் மக்கள் இவர்களை நம்பி ஏமாறுவது?

No comments:

Post a Comment