Friday, April 29, 2016

•சீமான் வெற்றி பெற்றால் அது தமிழ் மக்களுக்கு வெற்றி அல்ல. ஆனால் சீமான் தோல்வியடைந்தால் அது தமிழ் தேசியத்தின் தோல்வியாக கூறப்படும்.

•சீமான் வெற்றி பெற்றால் அது தமிழ் மக்களுக்கு வெற்றி அல்ல. ஆனால்
சீமான் தோல்வியடைந்தால் அது தமிழ் தேசியத்தின் தோல்வியாக கூறப்படும்.
இன்றைய தமிழக தேர்தல் களத்தில் சீமான் மட்டுமே தமிழ் தேசியத்திற்காக உரத்து குரல் கொடுக்கிறார்.
அவர் வெற்றி பெற்றாலும் அதிகாரமற்ற முதலமைச்சர் பதவி மூலம் தமிழ் தேசிய விடுதலைக்கு எதுவும் செய்துவிட முடியாது.
ஆனால் அவர் தோல்வியடைந்தால் தமிழக மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரித்து விட்டார்கள். தமிழக மக்களிடம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு இல்லை என்ற கருத்து பரப்பப்படும் அபாயம் உள்ளது.
சீமான் தனது உணர்ச்சிப் பேச்சால் ஆயிரக் கணக்கான இளைஞர்களை தேர்தல் பாதையில் கலக்க வைத்துள்ளார்.
வர்க்கப் போராட்டத்தின் ஒரு சிக்கல்கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறு இல்லை என்று தோழர் லெனின் கூறுகிறார்.
ஆனால் வன்முறையற்ற தேர்தல் பாதை மூலம் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்க முடியும் என சீமான் கூறுகிறார்.
தேர்தல் பாதையை நிராகரித்து மக்கள் யத்தப் பாதை மூலம் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை தூக்கியெறிவன்மூலமே மக்கள் விடுதலை பெற முடியும் என தோழர் சண்முகதாசன் கூறினார்.
ஆனால் தேர்தல் பாதை மூலம் ஒரு தமிழன் முதலமைச்சர் ஆவதன்மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என சீமான் கூறுகிறார்.
ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என தமிழ்நாடு விடுதலைப்படை தளபதி தோழர் தமிழரசன் கூறினார்.
ஆனால் தேர்தல் பாதை மூலம் ஒரு தமிழன் முதலமைச்சரானால் ஈழத் தமிழன் விடுதலைக்கு உதவமுடியும் என சீமான் கூறுகிறார்.
இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய இளைஞர்கள் காயடித்து தேர்தல் பாதையில் கலக்கவைத்ததன்மூலம் தெரிந்தோ தெரியாமலோ இந்திய அரசுக்கு சீமான் உதவியுள்ளார்.
இந்த உண்மையை இப்பொது உணராவிட்டாலும் தேர்தலுக்கு பின்னராவது நாம் தமிழர் கட்சியில் உள்ள இளைஞர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

No comments:

Post a Comment