Friday, April 29, 2016

•சம்பந்தர் அய்யாவும் இரண்டாம்தர பிரஜைதானா? அவருக்கும் இலங்கையில் சமவுரிமை இல்லையா?

•சம்பந்தர் அய்யாவும் இரண்டாம்தர பிரஜைதானா?
அவருக்கும் இலங்கையில் சமவுரிமை இல்லையா?
சம்பந்தர் அய்யா அவர்கள்,
தமிழீழத்தை கைவிட்டாச்சு என்றார்
ஆயதப் போராட்டம் தவறு என்றார்
புலிகள் பயங்கரவாதி என்றார்
அது போதாதென்று சிங்க கொடியையும் ஏந்தினார்.
இருந்தும் சிங்கள இனவெறியர்கள் அவரை இலங்கை பிரஜையாக கருதவில்லை
அவருக்கும்கூட சமவுரிமை வழங்க அவர்கள் தயாரில்லை.
சம்பந்தர் அய்யா அவர்கள்
ஒரு இலங்கை பிரஜை
ஒரு பாராளுமன்ற உறப்பினர்
எதிர்க்கட்சி தலைவரும்கூட
அவர் இலங்கையின் எந்தப் பகுதிக்கும் செல்ல உரிமை உண்டு.
இருந்தும் அவர் இராணுவ முகாமிற்கள் சென்றது தவறு என்கிறார்கள்.
அவரை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்கிறார்கள்.
அவர் பதவி விலக வேண்டும் என்று அவரது அலுவலக வாசலிலேயே போராடுகிறார்கள்.
இவ்வாறு அவர்களை போராட அனுப்பிய மகிந்த ராஜபக்சவை "தேசிய தலைவர்" என்று சம்பந்தர் அய்யா பாசமுடன் அழைக்கிறார்.
முன்னாள் போராளிகளை தேடி தேடி மீண்டும் கைது செய்யம் ரணில், மைத்திரி அரசு இதனை வேடிக்கை பார்க்கிறது.
அவர்களை நல்லாட்சி அரசு என்றும் ஒரு வருடத்திற்கள் தமிழ் மக்களுக்கு தீர்வு தருவார்கள் என்றும் சம்பந்தர் அய்யா கூறுகிறார்.
சம்பந்தர் அய்யா அவர்களே!
இந்த இனவெறியர்கள் முன்னர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தை 83ம் கலவரத்தின்போது பெண்கள் போல சேலை கட்டிக்கொண்டு ஒளித்து இந்தியாவுக்க தப்பி ஓட வைத்தவர்கள் என்று கூறகிறார்கள். அது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் உங்களை கோமணத்துடன் கூட விடமாட்டார்கள். அதை கவனத்தில் கொள்ளுங்கள்.
தமிழ்மக்களை கடவள்தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா கூறினார்.
ஆனால் அந்த கடவுளாலும்கூட இனி தமிழ் மக்களை காப்பாற்ற முடியாது.

No comments:

Post a Comment