Friday, April 29, 2016

•இப்ப என்ன சொல்லப்போகிறார்கள்?

•இப்ப என்ன சொல்லப்போகிறார்கள்?
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு.
ஈழ தமிழ் இன அழிப்பிற்காக இந்தியாவும் விசாரிக்கப்படல் வேண்டும்
என நிபுனர் குழு அறிவித்துள்ளது.
வெள்ளைக்கொடி பிடித்து சரணடைந்தோர் கொல்லப்பட்ட விடயத்தில் கலைஞர் மகள் கனிமொழிக்கும் பங்கு உண்டு என்று ஆனந்தி கூறியபோது இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறியவர்கள் இப்ப என்ன சொல்லப்போகிறார்கள்?
இந்தியா எப்போதும் ஈழத் தமிழர் நலனுக்காகவே பாடுபட்டு வருகிறது என்று கூறி வருபவர்கள் இப்போது இது குறித்து என்ன சொல்லப்போகிறார்கள்?
தமிழர் நலனுக்காகவே காங்கிரஸ் கட்சியுடன் கலைஞர் கூட்டு வைக்கிறார் என்று நம்புவர்கள் இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்?
இந்தியாவில் குடும்பத்துடன் சொகுசாக இருந்துகொண்டு இந்தியாவுக்கு விசுவாசமாக உழைத்துவரும் சம்பந்தர் அய்யா மற்றும் மாவை சேனாதிராசா இது குறித்து என்ன சொல்லப்போகிறார்கள்?
தமிழ்மக்கள் தீர்வு பெற இந்தியா உதவ வேண்டும் என்று கூறிய முதல்வர் விக்கி அய்யாவும் தமிழ் மக்கள் எல்லோரும் இந்தி படிக்க வேண்டும் என்று கூறிய யாழ்ப்பாணத்pல் இருக்கும் இந்திய தூதுவரும் இது குறித்து என்ன சொல்லப்போகிறார்கள்?
யார் என்ன சொன்னாலும் பிரச்சனையில்லை. ஆனால் இது குறித்து தமிழக மக்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதையே உலகம் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
தமிழின அழிப்பை மேற்கொண்ட காங்கிரஸ் தி;மு.க கூட்டை தமிழக மக்கள் நிராகரிக்கப்போகிறார்களா? அல்லது ஏற்றுக்கொள்ளப்போகிறார்களா என்பதை தேர்தல் முடிவு அறிய தரப்போகிறது.
காங்கிரஸ் தி.முக கூட்டு தோற்கடிக்கப்பட்டால் தமிழின அழிப்பை மேற்கொண்டவர்களை தமிழக மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்ற செய்தி உலகத்திற்கு எட்டும்.
மாறாக சோனியா கலைஞர் கூட்டு வெற்றி பெற்றால் உலகில் தன் இனத்தை அழித்தவர்களை வெற்றி பெற வைத்த ஒரே இனம் தமிழினம் என்ற அவமானம் உலக வரலாற்றில் முதன்முறையாக எழுதப்படும்.
தமிழக மக்களே!
தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பதை விட காங்கிரஸ் தி.மு.க கூட்டு தோல்வி அடைய வேண்டும் என்பதே முக்கியம்.
நிபுனர் குழவில் இடம்பெற்றவர்கள் விபரம் வருமாறு,
1. பேரா.டேனியஸ் ஃபியர்ஸ்ட்யீன்.
சர்வதேச இனப்படுகொலைப் பற்றியான பேரறிஞர்கள் குழுவின் தலைவர், அர்ஜண்டீனாவின் பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தின் இனப்படுகொலைக்கான மையத்தின் பேராசிரியர்.
2. திரு. டெனிஸ் ஹாலிடே,
ஐ.நாவின் துணை பொதுச்செயலாளராக இருந்தவர். ஐ.நாவின் 34 வருடங்களாக பணியாற்றி, ஈராக்கின் மீது பொருளாதாரத் தடையை பாதுகாப்பு அவை கொண்டு வந்ததை கண்டித்து துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜனிமா செய்தவர்.
3.பேரா.செவ்வேன் கரிபியான்
சர்வதேச இனப்படுகொலை சட்ட நிபுணரும், ஜெனிவா பல்கலைக்கழகம் மற்றும் நாச்டெல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சர்வதேச குற்றவியல் சட்டம், மற்றும் சட்ட தத்துவம் குறித்தான பேராசிரியராக இருபபவர். இவர் அரசுகளின் குற்றம் குறித்து ஆய்வு செய்பவர்.
4. திரு. ஹாலூக் ஜெர்கர்.
அரசியல் செயல்பாட்டிற்காக துருக்கி அரசால் சிறைப்படுத்தப்பட்ட அறிஞர். குர்து மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பவர்.
5. பேரா.மன்ஃப்ரட் ஓ ஹின்ஸ்,
ஜெர்மனியின் பிரிமென் பல்கலைக்கழகத்தின் அரசியல் சமூகவியல், சட்டத்தின் சமூகவியல் துறை பேராசிரியர். நமீபியா. மேற்கு சஹாராவின் விடுதலைப் போராட்டட்த்திற்கான ஆதரவு போராட்டத்திலிருந்தவர். யுனெஸ்கோவின் மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் இருக்கையினை நிர்வகித்தவர்.
6. ஜார்விஸ் ஹெலன்.
இவர் கம்போடியாவில் நிகழ்ந்த படுகொலைகளுக்கான கம்போடிய நீதிமன்றத்தின் துவக்கத்தில் இருந்து பணியாற்றியவர். இனப்படுகொலை புரிந்த கேமர் ரூஜ் அரசின் மீதான விசாரணையை ஒருங்கிணைப்புக்குழுவில் பணியாற்றியவர். கம்போடிய டிரிபூனல் என்று அறியப்படும் சர்வதேச கலப்பு விசாரணை நீதிமன்றத்தில் மிகமுக்கிய பணியாற்றியவர்.
7. வழக்கறிஞர். ஜோஸ் எலியாஸ் எஸ்டேவே மோல்ட்டோ.
திபெத்திற்கான சர்வதேச வழக்கறிஞர். திபெத் மற்றும் பர்மாவில் நிகழ்ந்த குற்றங்கள் குறித்து ஆய்வு செய்து வழக்குகளை பதிவு செய்தவர். வாலென்ஸியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டத்துறை பேராசிரியர்.
8. திரு. ஜேவியர் ஜிரால்டோ மொரியனோ
கொலம்பியாவின் மனித உரிமை செயல்பாட்டாளர். இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆய்வு செய்தவர். மக்கள் தீர்ப்பாயத்தின் துணைத் தலைவர்.
9. வழக்கறிஞர். காப்ரியல் டெல்லா மோர்ட்டா
ருவாண்டா இனப்படுகொலைக்கான வழக்கறிஞராக பணியாற்றியவர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை உருவாக்குவதற்கான அரசின் பிரதிநிதியாக செயல்பட்டவர்.
யூகஸ்லோவியாவிற்கான சர்வதேச விசாரனைக்கான சர்வதேச நீதிமன்றத்தில் சட்டத்துறையில் பணியாற்றியவர்
10. திரு. ஆய்ஸ்ட்டீன் டேவெட்டர்
நார்வே நாட்டினுடைய சர்வதேச சட்டம் குறித்தான நிபுணர். பிலிப்பெய்ன்ஸ் நாட்டில் நடந்த சட்டவிரோத படுகொலைகள் குறித்து தீர்ப்பாயத்தில் பங்களித்தவர்.
11. திரு. ஜர்னி மாயுங்க்
பர்மா நாட்டைச்சேர்ந்த மனித உரிமை போராளி. ரொஹிங்கோ இனப்படுகொலை குறித்தும், அதில் செயலற்றுப் போன ஆங்க்சாங் சுகியினை அம்பலப்படுத்தியவர்.

No comments:

Post a Comment