Friday, April 29, 2016

•கலைஞர் அவர்களே நீங்கள் தத்தெடுத்து வளர்த்த அகதி சிறுவன் எங்கே?

•கலைஞர் அவர்களே
நீங்கள் தத்தெடுத்து வளர்த்த அகதி சிறுவன் எங்கே?
1983ம் ஆண்டு அகதியாக வந்த சிறுவன் ஒருவனை தத்தெடுத்து வளர்த்தீர்கள்.
அந்த ஈழ அகதி சிறுவனுக்கு மணி என்று பெயரும் சூட்டி மகிழ்ந்தீர்கள்.
நீங்கள் மணியை அரவணைத்து படம் பிடித்து அதை உங்கள் முரசொலி பத்திரிகையில் பிரசுரமும் செய்தீர்கள்.
எம்.ஜி.ஆர் மலையாளி என்றும் அவரை விட உங்களுக்கே தமிழ் பற்று அதிகம் என்றும் காட்டுவதற்காக இப்படி ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்தீர்கள்.
ஆனால் அந்த சிறுவனுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டி வருமே என்று அஞ்சிய ஸ்டாலின் குடும்பத்தினர் அந்த சிறுவனை அடித்து விரட்டியாதாக செய்திகள் வந்தன.
இதுவரை காலமும் ஸ்டாலினுடன் ஒன்றாக இருந்து அண்மையில் பிரிந்து வந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியும் அந்த சிறுவன் எங்கே என்று கேட்டிருக்கிறார்.
அதுமட்டுமல்ல அந்த சிறுவன் ஸ்டாலினால் கொல்லப்பட்டிருக்லாம் என்று அச்சமும் தெரிவித்துள்ளார்.
உங்களுடைய மிகப்பெரிய குடும்ப போட்டோவில் அந்த மணியை தேடுனோம். ஆனால் அவனைக் காணவில்லை.
அந்த சிறுவன் எங்கே என்று பல முறை கேட்டுவிட்டோம். இதவரை நீங்கள் வாய் திறந்து பதில் சொல்லவில்லை.
முதலமைச்சர் ஜெயா அம்மையார் உட்பட தலைமை நீதிபதி அனைவருக்கும் இது குறித்து மனு அனுப்பியுள்ளோம். ஆனால் யாருமே பதில் தரவில்லை.
அகதி என்றால் கேட்பதற்கு யாருமற்ற அனாதைகள் என்பது உண்மைதான். அதனால்தான் தமிழகத்தில் அகதிகள் கொலை செய்யப்படுகிறார்கள். பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள். சிறப்புமுகாமில் அடைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
ஆனால் நீங்கள் உலக தமிழின தலைவர் என்று உங்களை அழைக்கிறீர்கள். கடலில் வீசி எறிந்தால் கட்டுமரமாக மிதந்து தமிழர்களுக்கு உதவுவேன் என கதை விடுகிறீர்கள்.
உங்களிடம் நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். தயவு செய்து அந்த அப்பாவி அகதி சிறுவன் எங்கே என்று சொல்லுங்கள்.
குறிப்பு- இந்த விடயம் எற்கனவே பலமுறை கேட்டுள்ளேன். தேர்தல் நேரத்திலாவது இந்த சிறுவன் எங்கே என்பதற்கு விடை கிடைக்கும் என்ற நப்பாசையில் இதனை மீண்டும் பதிவு செய்துள்ளேன்.

No comments:

Post a Comment