Friday, April 29, 2016

•கேட்பவன் கேனையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்பார்களாம்.

•கேட்பவன் கேனையன் என்றால்
காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்பார்களாம்.
ஆனால் இதை நம்புவதற்கு தமிழ் மக்கள் கேணையர்கள் இல்லை.
செய்தி- வடமாகாண கல்வி அமைச்சரும் யாழ் இந்திய தூதுவரும் சேர்ந்து அம்பேத்கார் விழா கொண்டாட்டம்.
அம்பேத்கார் வழியைப் பின்பற்றிய ரோகித் என்ற மாணவனைக் கொலை செய்த இந்திய அரசு
அம்பேத்காரரை தலைவராக கொண்ட டில்லி பல்கலைக்கழக மாணவர்களை தேசவிரோத சட்டத்தில் சிறையில் அடைத்த இந்திய அரசு
அம்பேத்கார் சிலைகளைக்கூட உடைத்துக்கொண்டிருக்கும் மோடியின் இந்துத்துவ அரசு
அதே இந்திய அரசு அம்பேத்காரருக்கு யாழ்ப்பாணத்தில் விழா எடுக்கிறது என்றால் அதனை எப்படி நம்புவது?
கடந்த வருடம் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் கல்வி கற்கும் ஏழாலை சிறீமுருகன் பாடசாலை தண்ணீர் தொட்டியில் உயர்சாதியினரால் நஞ்சு கலக்கப்பட்டது. இதனால் 60ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத வடமாகாண கல்வி அமைச்சர்
போதிய தகுதி இருந்தும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் உடுப்பிட்டி பெண்கள் பாடசாலை அதிபர் பதவி பெண் ஒருவருக்கு மறுக்கப்பட்டபோது எந்த நடவடிக்கையும் எடுக்காத கல்வி அமைச்சர்
கன்பொல்லை கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களினால் நிறுவப்பட்ட சிலை உயர்சாதி வெறியர்களால் சிதைக்கபட்டு இருக்கிறது. அதைக்கூட சீர்செய்து கொடுக்க முன்வராத கல்வி அமைச்சர்
அதே கல்வி அமைச்சர் இந்திய தூதுவருடன் சேர்ந்து சாதி ஒழிப்பிற்காக அம்பேத்கார் விழா நடத்தகிறார் என்றால் அதனை எப்படி நம்புவது?
அதே கல்வி அமைச்சர் இந்தியாவில் இருந்து பேச்சாளர்களை இறக்குமதி செய்து பட்டி மன்றம் நடத்தி புத்தாண்டு கொண்டாடுகிறார்.
ஆனால் வன்னிப் பாடசாலையில் மாணவர்கள் வெய்யிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் கல்வி கற்கிறார்கள். பாடசாலையின் ஓலைக் கூரையைக்கூட இந்த கல்வி அமைச்சரால் சரி செய்து கொடுக்க முடியவில்லை.
தமிழ் மக்கள் கஸ்டப்படும்போது அதைப் பற்றி கவலைப்படாது ஆடம்பர விழாக்கள் நடத்தும் இவர்கள் தமிழ் ரோமாபுரி மன்னர்கள்.
இவர்களுக்கு,
மீண்டும் சாவகச்சேரியில் வெள்ளை வானில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கவலை இல்லை
சம்பூரில் அனல்மின் நிலையத்திற்கு எதிராக தமிழ் மக்கள் போராடுவது குறித்து கவலை இல்லை.
இலங்கை இராணுவம் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பது குறித்து கவலை இல்லை.
தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து கவலை இல்லை
தமிழ் பகுதிகளில் புத்த விகாரை கட்டுவது குறித்தோ பிரமாண்டமான புத்தர் சிலை அமைப்பது குறித்தோ கவலை இல்லை.
இவர்களுடைய கவலை எல்லாம் இந்திய ஆக்கிரமிப்பை எப்படி இலங்கையில் எற்படுத்துவது என்பது பற்றியே.
குறிப்பு- இந்திய தூதர் மதுரை மல்லிகை இறக்குமதி செய்துள்ளாராம். அது இனி யாழ் மல்லி என அழைக்கப்படுமாம். ஆனால் இந்த மல்லி ஒருபோதும் மணக்கப்போவதில்லை. ஏனெனில் தமிழ் மக்களின் மனங்கள் குமுறிக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment