Friday, April 29, 2016

•எழுவர் விடுதலை. தொடரும் ஏமாற்றம்!

•எழுவர் விடுதலை. தொடரும் ஏமாற்றம்!
ஜெயா அம்மையார் தமிழக அரசுக்கு உள்ள உரிமையை பயன்படுத்தி எழுவரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் வேண்டுமென்றே மத்திய அரசின் கருத்தை கேட்டார்.
கடந்தமுறை மறுப்பு தெரிவித்த கலைஞர் கருணாநிதி அவர்கள் இம்முறை இந்த எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
தமிழக பா.ஜ.க வும் இந்த எழுவர் விடுதலைக்காக இதுவரை குரல் கொடுத்தே வந்துள்ளனர்.
மத்திய அரசு என்ன முடிவெடுத்தாலும் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று ராகுல் காந்தியும் கூறியுள்ளார்.
இவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று எந்த பெரிய கட்சிகளும் இதுவரை கோரவில்லை.
அப்படியிருந்தும் மோடி அரசு இவர்களை விடுதலை செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.
மோடி அரசும் ஜெயா அம்மையார் அரசும் வேண்டுமென்றே மக்களை ஏமாற்றி நாடகம் ஆடுகிறார்கள்.
உச்ச நீதிமன்றமும் இந்த அரசுகளின் நாடகத்திற்கு துணை போகின்றனவேயொழிய அந்த எழுவருக்கும் உரிய நீதி கிடைக்க வழி செய்யவில்லை.
இவர்களுக்கு விடுதலை அளிக்காவிடினும் நீண்ட பரோல் லீவாவது அளிக்க முடியும். ஆனால் தமிழக அரசு அதற்கு முன்வராதது அதன் கபட நோக்கத்தைக் காட்டுகிறது.
ஜெயா அம்மையாரின் அரசு நீண்ட பரோல் விடுமுறை மட்டுமல்ல பேரறிவாளன் தன் சுகயீனமான தந்தையை பார்ப்பதற்காக கேட்ட 3 நாள் விடுமுறையைக் கூட கொடுக்க வில்லை.
பரோல் விடுமுiறையக்கூட அளிக்காத ஜெயா அம்மையார், அவர்களின் விடுதலைக்கு மோடியிடம் அனுமதி கேட்கின்றாராம். அதை மோடி மறுக்கின்றாம். என்னே நாடகம் இது!
தேர்தலுக்கு இவர்கள் போடும் நாடகங்ளை புரிந்துகொள்ளமுடியாத அளவிற்கு தமிழக மக்கள் முட்டாள்கள் அல்லர்.
இவர்கள் வாக்கு கேட்டு வீட்டு வாசலுக்கு வரும்போது தமிழக மக்கள் நாக்கை பிடுங்கிறமாதிரி நாலு கேள்விகள் கேட்க வேண்டும்.
(1) ஜெயா அம்மையாருக்கு 21 நாளில் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் இந்த எழுவருக்கு 25 வருடமாக இழுத்தடிப்பது ஏன்?
(2)நடிகர் சஞ்சய்தத்ற்கு தண்டனைக் குறைப்பு வழங்கியவர்கள் இந்த எழுவருக்கு தண்டனைக் குறைப்பு வழங்க மறுப்பது ஏன்?
(3)நடிகர் சல்மான்கானை தண்டிக்காமல் விடுதலை செய்தவர்கள் இந்த அப்பாவிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன்?
(4) உள்ளவர்களுக்கு ஒரு நீதி. இல்லாதவருக்கு இன்னொரு நீதி. இதுதான் இந்திய நீதியா?

No comments:

Post a Comment