Saturday, April 30, 2016

• லிபரா முதலாளிகளின் பணத் திமிர்

• லிபரா முதலாளிகளின் பணத் திமிர்
ஏழை ஏழைக்கு உதவி செய்கிறான்
பணக்காரன் பணக்காரனுக்கு உதவி செய்கிறான்
இங்கு "தமிழன்" என்பது வெறும் சொல்தானா?
ஈழத் தமிழரான "லைக்கா" முதலாளி சுபாஸ்கரன் நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபா கொடுத்தது குறித்து நேற்று ஒரு பதிவு இட்டிருந்தேன்.
அதனைப் பார்வையிட்ட நண்பர் ஒருவர் "லிபரா" முதலாளியும் ஒரு கோடி ருபா நடிகர் சங்கத்திற்கு கொடுத்திருப்பதாகவும அது குறித்த படமும் அனுப்பியுள்ளார்.
"லைக்காவும"; "லிபராவும்" ஈழத் தமிழர்களே. பரஸ்பரம் வியாபாரப் போட்டி உள்ளவர்கள். ஆனால் அதற்காக இப்படி போட்டிக்கொண்டு நடிகர் சங்கத்திற்கு பணம் கொடுப்பது வெட்க கேடானது.
"லைக்காவும"; "லிபராவும"; உழைப்பது ஏழைத் தமிழ் மக்களிடம். ஆனால் அவர்கள் பணம் அன்பளிப்பு செய்வது பணக்கார நடிகர்களுக்கா?
இவர்கள் வியாபாரிகள் என்றும் இவர்கள் படம் தயாரிப்பதால் வியாபார நோக்கில் பணம் அன்பளிப்பு செய்வதாக சிலர் இதனை நியாயப்படுத்த முனைகிறார்கள்.
அவர்களிடம் நான் கேட்க விரும்புவது, ஸடாலின் மகன் உதயநிதியும் படம் தயாரிக்கிறார். ஆனால் அவர் இந்த நடிகர் சங்கத்திற்கு ஒரு பைசாகூட கொடுக்கவில்லையே. அவரிடம் இல்லாத பணமா?
கலைப்புலி தாணு வும் படம் தயாரிக்கிறார். ஆனால் அவர்கூட இந்த நடிகர் சங்கத்திற்கு ஒரு பைசா கொடுக்கவில்லையே?
ரஜனி ஒரு நடிகர். அவர் விரும்பியிருந்தால் தமது நடிகர் சங்க கட்டிடத்திற்கு தேவையான முழு பணத்தையும் கொடுத்திருக்கலாம் ஆனால் அவர்கூட எந்த உதவியும் செய்யவில்லையே.
கமல் தன் பணத்தை கொடுத்திருக்கலாம். அல்லது சக நடிகர்களிடம் திரட்டி கொடுத்திருக்கலாம். ஆனால் எதற்காக ஈழத் தமிழ் முதலாளிகளிடம் பணம் பெற்றுக் கொடுக்க வேண்டும்?
"லைக்காவும"; "லிபராவும்" வானொலி, தொலைக்காட்சி எல்லாம் நடத்துகிறார்கள். அதனை தமிழ்தேசிய ஊடகம் என்று வேறு அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஈழ அகதிகளுக்கு நடக்கும் அவலங்களை மறந்தும்கூட சொல்ல மாட்டார்கள்.
அண்மையில் மண்டபம் முகாமில் உள்ள அகதிப் பெண்ணை நான்கு பொலிசார் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இதுகுறித்த செயதி தினமணியிலும் தமிழ்வின் ஊடகத்திலும் மட்டுமே வந்தது.
ஆனால் இந்த தேசிய ஊடகங்கள் இது குறித்து வாய் திறக்கவேயில்லை. கேட்டால் இதுவும் ஒரு வியாபார தந்திரம் என்பார்களோ?
கும்மிடிப்பூண்டி முகாமில் உள்ள அகதி ஒருவர் தமிழக காவல்துறையால் கால் முறிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக படுக்கையில் இருக்கிறார். அவருடைய குடும்பத்திற்கு இந்த பணக்கார முதலாளிகள் ஒரு பைசாகூட உதவி செய்யவில்லை.
ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஏழைத் தமிழரான திலீபன் மகேந்திரன் என்பவரே இதனை அறிந்து தனது நண்பர்களிடம் பணம் திரட்டி ரூபா 85 ஆயிரம் கொடுத்து அந்த அகதிக் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கிறார்.
திலீபன் மகேந்திரன் கொடி எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு பொலிசாரால் கை முறிக்கப்பட்டவர். அவரே மிகவும் நெருக்டியான நிலையில் இருக்கிறார். ஒரு ஏழையான அவர் இன்னொரு ஏழையான அகதி குடும்பத்திற்கு உதவி செய்கிறார்.
ஆனால் பணக்காரர்களான லைக்கா மற்றும் லிபரா முதலாளிகள் தங்கள் இனமான அகதிகள் கஸ்டப்படும்போது பணக்கார நடிகர்களுக்க உதவி செய்கிறார்கள்.
இவர்கள் ஈழத் தமிழர்கள். இவர்களும் அகதியாக இருந்தவர்கள். தமது உறவகள் கஸ்ட நிலையில் இருக்கும்போது பணக்கார நடிகர்களுக்கு உதவி செய்ய எப்படி இவர்களுக்கு முடிகிறது?
அப்படி என்றால் ,
இன உணர்வு என்பது வெறும் சொல்தானா?
வர்க்க உணர்வு என்பது மட்டும்தான் உண்மையா?

No comments:

Post a Comment