Friday, April 29, 2016

•செய்தி- இனவாதத்தை தூண்ட வடக்கில் விக்கினேஸ்வரனும் தெற்கில் மகிந்தவும் முயல்வதாக ஜே.வி.பி தலைவர் ரில்வின் சில்வா குற்றச்சாட்டு.

•செய்தி- இனவாதத்தை தூண்ட வடக்கில் விக்கினேஸ்வரனும் தெற்கில் மகிந்தவும் முயல்வதாக ஜே.வி.பி தலைவர் ரில்வின் சில்வா குற்றச்சாட்டு.
இனப்படுகொலை புரிந்த மகிந்த ராஜபக்ச இனவாதத்தை தூண்டி மீண்டும் பதவிக்கு வர முயல்கிறார் என்பது உண்மையே.
ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் விக்கினேஸ்வரன் அவர்களையும் இனவாதத்தை தூண்டுவதாக கூறுவது தவறாகும்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள்,
•சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யுமாறு கோருகிறார். அது எப்படி இனவாதமாகும்?
•காணமல் போனவர்களை கண்டு பிடிக்குமாறு கோருகிறார். அது எப்படி இனவாதமாகும்?
•போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்கிறார். அது எப்படி இனவாதமாகும்?
•வடக்கில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் எனக் கோருகிறார். அது எப்படி இனவாதமாகும்?
•தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசம் ஒரு தேசம் என்கிறார். அது எப்படி இனவாதமாகும்?
•அந்த தமிழ் தேசத்திற்கு சமஸ்டி தீர்வு தரும்படி கேட்கிறார். அது எப்படி இனவாதமாகும்?
ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவன் எவனும் உண்மையான கம்யுனிஸ்ட் இல்லை என்று தோழர் லெனின் கூறுகிறார்.
ஆனால் கம்யுனிஸ்ட்டுகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் ஜே.வி.பி இதுவரை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவில்லை.
தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத ஜே.வி.பி க்கு அந்த உரிமையை பயன்படுத்தி பிரிந்துபோக வேண்டாம் என்று தமிழ் மக்களிடம் கோருவதற்கு என்ன தகுதி இருக்கு?
ரில்வின் சில்வா அவர்களே!
மகிந்தவை பதவிக்கு கொண்டு வந்து அவர் போர் என்ற போர்வையில் தமிழின அழிப்பு மேற்கொண்டமைக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியமைக்காக முதலில் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருங்கள்.
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பின்பு அந்த உரிமையை பாவித்து பிரிந்து போக வேண்டாம் என்று தமிழ் மக்களிடம் கேளுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலமே தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் உண்மையான ஜக்கியத்தைக் கட்ட முடியும். அதைவிடுத்து மகிந்தவுடன் சேர்த்து விக்கினேஸ்வரனையும் இனவாதி என்று கூறுவதால் ஜக்கியத்தைக் கட்டமுடியாது.

No comments:

Post a Comment