Saturday, January 30, 2021

1434 நாளாக தொடரும் போராட்டம்!

•1434 நாளாக தொடரும் போராட்டம்! காணாமல் போதல் கொடுமை; என்றால் அதைவிட கொடுமையானது அவர்களை தேடும் உறவுகள் எந்த முடிவும் அறியாமல் ஒவ்வொருவராக செத்துக் கொண்டிருப்பது. சுமார் நான்கு வருடங்களாக தம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் இவர்களுக்கு இதுவரை எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. ஆயுதம் ஏந்திப் போராடுவது தவறு, அகிம்சை வழியில் போராடவேண்டும் என்று போதிப்பவர்கள் இந்த உறவுகள் நான்கு வருடமாக அகிம்சை வழியில் போராடியும் எந்த தீர்வும் பெறாதது பற்றி என்ன கூறப்போகிறார்கள்? அவர்கள் என்ன போரில் மரணமடைந்தவர்களையா கேட்கிறார்கள். இலங்கை அரசை நம்பி ராணுவத்தின் கையில் தாம் ஒப்படைத்த தம் உறவுகள் எங்கேயென்றுதானே கேட்கிறார்கள். சொல்லித் தொலையுங்களேன்டா. குறிப்பு - அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது அதை தட்டிக் கழிக்க முடியாது.

No comments:

Post a Comment