Saturday, January 30, 2021

யாழ் இந்திய தூதரின் சூழ்ச்சி பலிக்குமா?

• யாழ் இந்திய தூதரின் சூழ்ச்சி பலிக்குமா? நாலு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டமையால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதர் குடியரசுதின விழாவை ரத்துச் செய்துள்ளார். மேலோட்டமாக பார்க்கும்போது தமிழரான யாழ் இந்திய தூதர் தமிழக மீனவன் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இதனை செய்திருப்பதாக தோன்றும். ஆனால் யாழ் இந்திய தூதுவர் தன் சூழ்ச்சிகளை ஆரம்பித்தவிட்டார் என்றே தோன்றுகிறது. யாழ் குடாநாட்டில் உள்ள மீனவ சங்கங்களை தமிழக மீனவருக்கு எதிராக கதவடைப்பு போராட்டம் நடத்தும்படி தூண்டிவிடுகிறார். கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் உடல்கள் யாழ் மருத்தவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. அவை இன்னும் கு டும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில் மனிதாபிமானம் இன்றி தமிழக மீனவர்களுக்கு எதிராக யாழ் இந்திய தூதர் சூழ்ச்சிப்படி ஈழ தமிழ் மீனவ சங்கம் ஒன்று கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 2009 ற்கு பிறகு தமிழக மற்றும் ஈழத் தமிழர்களிடையே ஒற்றுமை அதிகரித்து வருகிறது. இதனை குழப்புவதற்காகவே யாழ் இந்திய தூதர் சூழ்ச்சி செய்கிறார். இதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் பலியாகக்கூடாது.

No comments:

Post a Comment